பாகிஸ்தான் சிறையிலிருந்து  200 இந்திய மீனவர்கள் விடுதலை
பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நம் மீனவர்களை அந்நாட்டின் கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். இதையடுத்து,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.



latest tamil news


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நம் மீனவர்களை அந்நாட்டின் கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து, அங்குள்ள சிறைகளில் நம் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு துாதரக ரீதியில் பேச்சு நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் இருந்த 198 இந்திய மீனவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, பஞ்சாபின் வாகா எல்லையில் நம் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் இரண்டாம் கட்டமாக, மேலும் 200 இந்திய மீனவர்களுடன், பொதுமக்கள் மூன்று பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், 'மனிதாபிமான அடிப்படையிலான விஷயங்களை அரசியலாக்கக் கூடாது என்கிற ரீதியில் எங்கள் நாடு செயல்படுகிறது.


latest tamil news


'எனவே, இந்திய மீனவர்கள் விடுதலையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

நம் மீனவர்கள் அனைவரையும், பஞ்சாபின் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-ஜூன்-202314:34:46 IST Report Abuse
Ramesh Sargam பாக்கிஸ்தான் சிறையிலிருந்து மீனவர்கள் விடுபட்டால், அவர்களை இந்திய மீனவர்கள் என்று கூறுவதும், இலங்கை சிறையிலிருந்து மீனவர்கள் விடுபட்டால், அவர்களை தமிழக மீனவர்கள் என்றும் ஏன் 'தரம் பிரித்து' குறிப்பிடுகிறீர்கள்? தமிழக மீனவர்கள், இந்தியர்கள் இல்லையா? நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா...?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
03-ஜூன்-202312:35:42 IST Report Abuse
Barakat Ali அவனால வெச்சு சோறு போட முடியலை ....... அதை நல்லெண்ணம் ன்னு உருட்ட திராவிட மாடல் ரெடி .... அப்பத்தானே எங்க ஆளுங்க ஓட்டை வாங்கலாம் ????
Rate this:
Cancel
03-ஜூன்-202310:18:26 IST Report Abuse
ஆரூர் ரங் பிறந்த நாளை ஒட்டி கட்டுமர மீனவர்கள் விடுதலை. ஸ்டிக்கர் BY விடியல்😛.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X