பிரதமர் அலுவலக கண்காணிப்பில் சோதனை
பிரதமர் அலுவலக கண்காணிப்பில் சோதனை

பிரதமர் அலுவலக கண்காணிப்பில் சோதனை

Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்றபோது தி.மு.க.,வினர் அதிகாரிகளை தாக்கினர். இந்த விவகாரம் உடனடியாக மத்திய வருவாய் செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் பேசினார்.இந்த அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தும், 'பாதுகாப்புக்கு தமிழக போலீசார்
Test under the supervision of the Prime Ministers Office  பிரதமர் அலுவலக கண்காணிப்பில் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்றபோது தி.மு.க.,வினர் அதிகாரிகளை தாக்கினர். இந்த விவகாரம் உடனடியாக மத்திய வருவாய் செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் பேசினார்.

இந்த அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தும், 'பாதுகாப்புக்கு தமிழக போலீசார் தேவையில்லை; மத்திய துணை ராணுவப்படையும் பாதுகாப்பு தர வேண்டும்' என சஞ்சய் மல்ஹோத்ரா உத்தரவிட்டாராம். அடுத்த 30 நிமிடங்களில் மத்திய துணை ராணுவம் பாதுகாப்பிற்காக வந்துவிட்டது.


latest tamil news


இந்த தாக்குதல் விவகாரம் பற்றி பிரதமர் அலுவலகத்திற்கும் சொல்லப்பட்டதாம். இதையடுத்து, இந்த சோதனை எப்படி நடக்கிறது, இதற்கு ஏதாவது தடங்கல்கள் உண்டா என பிரதமர் அலுவலகமும் கண்காணித்து வந்ததாம்.

செந்தில் பாலாஜியைத் தவிர, தி.மு.க., குடும்பத்தின் ஒரு முக்கிய நபரும் விரைவில் சிக்குவார் என கூறப்படுகிறது. ' பல மாதங்களாக செயல்பட்டு இவருக்கு எதிராக பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன; இனி தி.மு.க.,விற்கு சிக்கல் தான்' என்கின்றனர் மத்திய அரசின் உயரதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

Duruvesan - Dharmapuri,இந்தியா
04-ஜூன்-202316:10:25 IST Report Abuse
Duruvesan மோடி 9 வருஷம் ஆட்சி இது வரை சிறப்பாக உள்ளது
Rate this:
Cancel
venkatakrishna - Trichy,இந்தியா
04-ஜூன்-202315:30:19 IST Report Abuse
venkatakrishna இப்படியே உதார் விட்டு விட்டு மத்திய அரசு மேலும் மேலும் பெருந்தப்பு செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அனுமதிக்கிறதே தவிர வேறு நடவடிக்கைகள் ஏதும் இல்லை. விஞ்ஞானரீதியாக மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்று எங்கள் தலைவர் செயல் விளக்கமாக செய்து காட்டியுள்ளார். இந்த செயல் முறையை பயன்படுத்தி உலகளவில் மற்ற அரசியல்வாதிகள் இப்போது செயல் படுகிறார்கள்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-ஜூன்-202313:57:57 IST Report Abuse
J.Isaac எல்லாம் அரசியல் நாடகம்.நடிகர்கள், முதுகு எலும்பு இல்லாத அதிகாரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X