காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்
காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்

காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்

Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மயிலாடுதுறை:காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுவதை உடனடியாக சரிசெய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் தெரிவித்தார்.மயிலாடுதுறை நகராட்சியில் 2007-ஆம் ஆண்டுமுதல் புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நகரின் பல்வேறு
 Hindu Front Condemns Opening of Burial Sewerage in Cauvery River  காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மயிலாடுதுறை:காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுவதை உடனடியாக சரிசெய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை நகராட்சியில் 2007-ஆம் ஆண்டுமுதல் புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் ஆள்நுழைவுத் தொட்டி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, காவிரி துலாக்கட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து அதிகளவில் பொங்கி வெளியேறும் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்துவருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் பகுதியில் புதைசாக்கடை கழிவுநீர் வெளியேறி காவிரி ஆற்றில் கலப்பதை இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நதியை புனிதமானதாக போற்றும் நம் நாட்டில்தான் அதனை அசுத்தப்படுத்துவதும் அதிகம் என்பதற்கு மயிலாடுதுறை காவிரி நதியே உதாரணம். மயிலாடுதுறையில் அரசே நதியை அசுத்தப்படுத்துகிறது. இதனால், தாங்களும் நதியை அசுத்தப்படுத்தவதில் தவறில்லை என்று பொதுமக்கள் நினைப்பார்கள்.

புனித நதி என பக்தர்கள் தேடிச்சென்று புனிதநீராடும் கங்கை நதியே காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராடி தனது பாவங்களை போக்கிக்கொண்டதாக ஐதீகம். இதனால், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து புனித நீராடிச் செல்வர். மாற்றுத் திறனாளிகள் புனித நீராடுவதற்காக முடவன் முழுக்கு என கொண்டாடுவது மயிலாடுதுறையில்தான்.

இத்தனை புனிதம்வாய்ந்த காவிரி நதியில், நகராட்சியால் புதைசாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. புதைசாக்கடை கழிவுநீரை சுத்தகரிப்பதற்காக ஆறுபாதியில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நகராட்சியின் பொறுப்பின்னை மற்றும் கவனக்குறைவு காரணமாக புனிதம் வாய்ந்த இந்த நதியை இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளனர். இந்து முன்னணி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. தேவைப்பட்டால் இதனைக்; கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு காவிரி நதியை மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜூன்-202322:10:48 IST Report Abuse
Ramesh Sargam சென்னையில் உள்ள பாலவாக்கம் கடற்கரையில், அங்குள்ள மீனவர்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பெரிய குழாய்களின் வழியாக அருகில் உள்ள கடலில் கலக்கிறது. கடற்கரையோரம் சிறிது நேரம் காலம் கழிக்கலாம் என்று குடும்பத்துடன் வந்த நான், அந்த கழிவு நீர் கடலில் கலப்பதை பார்த்து அப்படியே திரும்பிவிட்டேன், காலை கடல் நீரில் வைக்காமல்.
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
05-ஜூன்-202306:26:59 IST Report Abuse
ஆக ..காலம் கழிக்க வந்தால் இதையெல்லாம் பார்க்க தேவையா ... கங்கை துவக்கம் முதல் முடிவு வரை பிரச்சினையே இது தான் ..மகாமகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்ய இருந்ததை கேன்சல் செய்து பக்கத்திலேயே போரிங் போட்டு அந்த தண்ணீரால் குளம் நிரப்பப்பட்டதும் இந்த காரணங்களுக்காக தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X