ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் காலம்;  பொன்முடி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் காலம்; பொன்முடி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் காலம்; பொன்முடி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (65) | |
Advertisement
சென்னை: 'மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்து விட்டது. எனவே ஆசிரியர்கள் 'அட்சஸ்ட்' செய்து கொள்ள வேண்டும்' என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில்
A time when students beat teachers; Strong opposition to Ponmudi talk   ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் காலம்;  பொன்முடி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை: 'மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்து விட்டது. எனவே ஆசிரியர்கள் 'அட்சஸ்ட்' செய்து கொள்ள வேண்டும்' என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ காட்சி 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வலம் வருகிறது. அதில் 'மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பெடுத்து அடித்த காலம் மாறி மாணவர்கள் பிரம்பெடுத்து ஆசிரியர்களை அடிக்க வரும் காலமாகி விட்டது. எல்லாம் கால மாற்றம். இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து தான் கல்வி கற்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இதற்கு பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து. தமிழக ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்க தலைவர் தீர்த்தகிரி, செயலர் இளம்பரிதி, பொருளாளர் கவிதா ஆகியோர் கூட்டாக அறிக்கையில் 'உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவரே இப்படி பொறுப்பின்றி பேசியிருப்பது ஆசிரியர்களை வேதனை அடையச் செய்துள்ளது. பொன்முடியின் பேச்சு கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளனர்.



latest tamil news

'நெட் செட்' பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்க ஆலோசகர் பேராசிரியர் நாகராஜன் கூறியதாவது: அமைச்சரின் பேச்சு மாணவர்களின் தவறான செயலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. சமீபகாலமாக கல்லுாரிக்கு வரும் பல மாணவர்களின் போக்கு மிகவும் மோசமாகி விட்டது. சிலர் போதை பழக்கத்துடன் வருகின்றனர். சிலர் ஆயுதங்களுடன் வகுப்பறைக்கு வருகின்றனர்.

ஆனால் ஆசிரியர்கள் நிராயுதபாணியாக வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தி விட்டு தங்களை தற்காத்துக் கொண்டு திரும்பும் நிலை உள்ளது. இது ஆரோக்கியமான விஷயமல்ல. மாணவர்களின் இந்த போக்கை மாற்ற வேண்டும். அதற்கு உயர்கல்வி அமைச்சர் உயர்கல்வித் துறை அரசு போலீஸ் மற்றும் பெற்றோர் இணைந்து மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

மாறாக மாணவர்களின் இந்த செயல் காலமாற்றம்; அதை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சாக்குபோக்கு கூறி தங்களுக்குரிய பொறுப்பை தட்டி கழித்து விட்டு கடமையில் இருந்து விலகுவது ஆசிரியர்களை மட்டுமல்ல. இளைய சமூகத்தினருக்கும் சமுதாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (65)

vaiyapuriloganathan - karur,இந்தியா
06-ஜூன்-202307:20:06 IST Report Abuse
vaiyapuriloganathan முதல் வேலை பொன்முடி அமைச்சரை பிரம்பை எடுத்து வெளுத்தால் பசங்க ஒழுக்கமா இருப்பாங்க.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
06-ஜூன்-202307:10:21 IST Report Abuse
N Annamalai மந்திரியை மாற்றும் நேரம்
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
05-ஜூன்-202318:50:11 IST Report Abuse
முதல் தமிழன் CM Sir, please permenant dismissal this minister. Always speak against ethics.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X