வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து காரணமாக, பாலசோர் வழித்தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்து சீராகும் வரை, ஒடிசாவில் இருந்து மேற்கு வங்கத்தின் கோல்கட்டா நகருக்கு இலவச பஸ் போக்குவரத்து இயக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணிகளால் பாலசோர் வழித்தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
![]()
|
இதையடுத்து, ''ஒடிசா அரசு சார்பில் புரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கோல்கட்டாவுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்படும். பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வரை இந்த இலவச பஸ்கள் இயக்கப்படும்,'' என, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.