ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது!
ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது!

ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது!

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: ஊட்டியில் ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ரவி உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தாய்மொழி வழி
The Vice-Chancellors Conference is being held today in Ooty  ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஊட்டியில் ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ரவி உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.


மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தாய்மொழி வழி கல்வியை, தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் மாநாட்டை, தமிழக கவர்னர் ரவி, ஊட்டியில் இன்று நடத்துகிறார் என கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டு இருந்தது.



latest tamil news


அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் துணைவேந்தர்கள் மாநாடு, ஊட்டியில் இன்று(ஜூன் 05) நடைபெற்றது; மாநாட்டை கவர்னர் ரவி துவக்கி

வைத்தார்.


உயர்கல்வியில் தமிழ் மொழியை அறிமுகம் செய்யும் வகையில், உயர்கல்விக்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக, இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
பாட புத்தகங்கள், ஆய்வு புத்தகங்கள், படிப்புக்கு தேவையான இதர புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, பல்கலைகள் ஊக்குவிக்கப்படும்.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் தலைவர் ஜெகதீஷ்குமார், ஆன்லைன் வழியில் மாநாட்டில் பேச உள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலை துணைவேந்தர் அலோக்குமார் ராய், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை துணைவேந்தரும், யு.ஜி.சி.,யின் இந்திய மொழிகளில் பாட புத்தகம் தயாரிக்கும் குழுவின் தலைவருமான நாகேஸ்வர ராவ்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மொழிபெயர்ப்பு பிரிவு அதிகாரி புத்தா சந்திரசேகர் ஆகியோர், துணைவேந்தர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ரவி உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

Sivan - Puliyampatti ,இந்தியா
05-ஜூன்-202310:46:44 IST Report Abuse
Sivan புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை அமல் படுத்த வேண்டும் காலத்திற்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்ய வேண்டும் இதில் அரசியல் தேவை அற்றது இது வளமான எதிர்கால சமூகத்தை உருவாக்க பொது நோக்குடன் நல்ல விஷயங்களை ஏற்று கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
05-ஜூன்-202310:33:21 IST Report Abuse
தஞ்சை மன்னர் உனக்கு ஊட்டியில் விடுமுறை கழிக்க வேண்டுமானால போய்ட்டு வா அதைவிடுத்து மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு ஷோ காட்ட வேண்டாம் இந்த கொசுவை ஒழிக்க மருந்து இருக்க இல்லயா
Rate this:
Cancel
L.Lekshmiganthan - Chennai,இந்தியா
05-ஜூன்-202310:13:39 IST Report Abuse
L.Lekshmiganthan தாய்மொழிக்கல்விக்கு இணையான கல்வி கிடையாது. தமிழகத்தில் தாய்மொழிக்கல்வித் தோல்விக்குக் காரணம் அடிப்படை ஆங்கிலம் 1 முதல் 12 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பூஜ்யம் ஆகிவிட்டது. இந்த நிலை மாற்றப்பட்டால் தாய்மொழிக் கல்வி உயிர் பெறும் என்பது உறுதி.இதுவே புதிய கல்விக்கொள்கையின் முதல் நோக்கமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X