வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஊட்டியில் ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ரவி உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தாய்மொழி வழி கல்வியை, தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் மாநாட்டை, தமிழக கவர்னர் ரவி, ஊட்டியில் இன்று நடத்துகிறார் என கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டு இருந்தது.
![]()
|
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் துணைவேந்தர்கள் மாநாடு, ஊட்டியில் இன்று(ஜூன் 05) நடைபெற்றது; மாநாட்டை கவர்னர் ரவி துவக்கி
வைத்தார்.
உயர்கல்வியில் தமிழ் மொழியை அறிமுகம் செய்யும் வகையில், உயர்கல்விக்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக, இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
பாட புத்தகங்கள், ஆய்வு புத்தகங்கள், படிப்புக்கு தேவையான இதர புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, பல்கலைகள் ஊக்குவிக்கப்படும்.
இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் தலைவர் ஜெகதீஷ்குமார், ஆன்லைன் வழியில் மாநாட்டில் பேச உள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலை துணைவேந்தர் அலோக்குமார் ராய், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை துணைவேந்தரும், யு.ஜி.சி.,யின் இந்திய மொழிகளில் பாட புத்தகம் தயாரிக்கும் குழுவின் தலைவருமான நாகேஸ்வர ராவ்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மொழிபெயர்ப்பு பிரிவு அதிகாரி புத்தா சந்திரசேகர் ஆகியோர், துணைவேந்தர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ரவி உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.