அரிசி கொம்பன் யானை பிடிபட்டது! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
அரிசி கொம்பன் யானை பிடிபட்டது! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

அரிசி கொம்பன் யானை பிடிபட்டது! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
கம்பம்: கம்பம் பகுதியில் ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்தனர். கும்கி யானைகள் உதவியுடன் யானை மாற்று இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.இடுக்கி சின்ன கானலில் அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் அம்மாநில வனத்துறையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டு, ஏப்.30 ல் தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. மே 2 ல் மேகமலை பகுதிக்கு வந்தது. அன்று
Arice Komban elephant caught! Forest department caught with anesthetic injection  அரிசி கொம்பன் யானை பிடிபட்டது! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

கம்பம்: கம்பம் பகுதியில் ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்தனர். கும்கி யானைகள் உதவியுடன் யானை மாற்று இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.


இடுக்கி சின்ன கானலில் அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் அம்மாநில வனத்துறையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டு, ஏப்.30 ல் தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. மே 2 ல் மேகமலை பகுதிக்கு வந்தது. அன்று முதல் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.


இரண்டு வாரங்கள் கழித்து, அரிசி கொம்பன் மீண்டும் தேக்கடி வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் 2 வாரத்திற்கும் மேலாக அரிசி கொம்பன் மேகமலைக்கு வரவில்லை. மாறாக மே 27 முதல் கம்பம், சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஒவுலாபுரம் பகுதிகளில் சுற்றி திரிந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X