பீஹாரை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம்: நிதிஷ் மீது பா.ஜ., விமர்சனம்
பீஹாரை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம்: நிதிஷ் மீது பா.ஜ., விமர்சனம்

பீஹாரை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம்: நிதிஷ் மீது பா.ஜ., விமர்சனம்

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்திய, நிதிஷ் குமார் பீஹாரை மறந்து விட்டார் என பாஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.பீஹார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம், ரூ. 1,710 கோடியில் கட்டப்பட்டு வந்த, இப்பாலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்திய, நிதிஷ் குமார் பீஹாரை மறந்து விட்டார் என பாஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.



latest tamil news


பீஹார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம், ரூ. 1,710 கோடியில் கட்டப்பட்டு வந்த, இப்பாலம் பலத்த காற்று மற்றும் மழையால் இடிந்து விழுந்தது. இந்த பாலம் இரண்டாவது தடவையாக இடிந்து விழுவது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:


நேற்று இடிந்து விழுந்த பாலம் கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டப்படாததால் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இது தொடர்பாக, பாஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:


தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்திய நிதிஷ் குமார், பீஹாரை மறந்து விட்டார். ஊழல் அதிகம் நடக்கிறது. இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலம் இடிந்து விழுந்தது இரண்டாவது முறை.

அதிகாரிகள் மீது அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என நான் கேட்க விரும்புகிறேன்?. தற்போது பீஹாரில் கட்டப்பட்டு வரும் அனைத்து பாலங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

Pavithra - Bengaluru,இந்தியா
05-ஜூன்-202322:31:56 IST Report Abuse
Pavithra நாடே கொரோனாவில் தத்தளித்தபோது ஒருத்தர் திதியைப்பத்தி விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் சுத்திகொண்டு இருந்தாரே அவரை பத்தி சொல்றேளா ?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
05-ஜூன்-202321:03:49 IST Report Abuse
vbs manian இவர் ஆட்சியில் பாலங்கள் வரிசையாய் விழுகின்றன. வீட்டை சரியாக நிர்வாகம் செய்யமுடியவில்லை. கூட்டணி அமைத்து இந்தியாவை காப்பாற்ற போகிறார்.
Rate this:
Cancel
05-ஜூன்-202319:29:34 IST Report Abuse
N SASIKUMAR YADHAV விஞ்ஞானரீதியான ஊழல்கட்சியான திமுகவுடன் கொஞ்சி குலாவுவதால் திராவிட காற்று பீகாருக்கு சென்றுவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X