சிறை கைதிகளுக்கு இட்லி, சப்பாத்தி... இனி வாரத்தில் 2 நாள் சிக்கன்!
சிறை கைதிகளுக்கு இட்லி, சப்பாத்தி... இனி வாரத்தில் 2 நாள் சிக்கன்!

சிறை கைதிகளுக்கு இட்லி, சப்பாத்தி... இனி வாரத்தில் 2 நாள் சிக்கன்!

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
கோவை: சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, சிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம், சாம்பார் ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிக்கன் வழங்கப்படுகிறது.இதில் மாற்றங்கள் செய்ய தமிழக அரசின் சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை புழல்

கோவை: சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, சிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம், சாம்பார் ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிக்கன் வழங்கப்படுகிறது.

இதில் மாற்றங்கள் செய்ய தமிழக அரசின் சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை புழல் சிறையில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. புதிய உத்தரவுபடி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை கோதுமை உப்புமா, தேங்காய் சட்னி மற்றும் கடலை சட்னி வழங்கப்படும். மதியம் அரிசி சாதம், ரசம், காய்கறி கூட்டு, மாலை டீ, சுண்டல், இரவு வேளையில் அரிசி சாதம், சாம்பார் வழங்கப்படும்.



latest tamil news



சைவம் சாப்பிடுவோருக்கு மதியம் உருளைக்கிழங்கு கறி, ரவா கேசரி, வாழைப்பழம், கொய்யாப்பழமும், அசைவம் சாப்பிடுவோருக்கு சிக்கனும் வழங்கப்படும். இதே நடைமுறை புதன்கிழமையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கள் காலை- பொங்கல், சாம்பார், செவ்வாய்- ராகி உப்புமா, புதன்- தக்காளி சாதம், வியாழன்- எலுமிச்சை சாதம், வெள்ளி- இட்லி, சனிக்கிழமை-புதினா சாதம், முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு சப்பாத்தி வழங்கவும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேர்க்கடலை வழங்கியதற்கு மாற்றாக, சுண்டல், வேர்க்கடலை, பச்சைப்பயிறு, காராமணி என மாற்றி மாற்றி வழங்கவும் சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

Balasubramanian - Bangalore,இந்தியா
06-ஜூன்-202314:14:01 IST Report Abuse
Balasubramanian ஒடி உழைத்து கஷ்டப்பட்டு குடும்ப பாரத்தை சுமப்பதை விட, இது மாதிரி அரசு விருந்தாளியாக இருப்பது, ஆனந்தமாக இருக்கும் போல அதுவும் லெக் பீஸு வேற கொடுத்து வைத்த ரௌடிகள் அனுபவி ராஜா அனுபவி
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-ஜூன்-202312:36:38 IST Report Abuse
Ramesh Sargam இது என்ன, வரும் நாட்களில் Horlicks, Bournvita, Boost போன்ற பானங்களும் கொடுக்க வாய்ப்பு அதிகம். ஏன்? ஏன் என்றால் அங்குள்ளவர்கள் அதிகம்பேர் திமுகவினர் மற்றும் திமுகவின் கூட்டாளி கட்சியினர்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
06-ஜூன்-202310:59:32 IST Report Abuse
Rengaraj ரௌடிகள் எண்ணிக்கை ஏன் அதிகரிக்காது. ?? மாமியார் மாமனார் வீட்டில் கூட இப்படி உபசரிப்பு இருக்காது. நாட்டில் எத்தனையோ பள்ளிகளில் ஏழைக்குழந்தைகள் சரியான உணவின்றி படிக்க வருகின்றனர். அவர்களை பற்றி இந்த அரசாங்கம் இந்த அளவுக்கு யோசிக்கிறதா? கைதிகளுக்கு ஏன் இத்தனை உபசாரம். ? கூலிபடைகள் , குற்றங்கள் , ரௌடியிசம் ஆகியவை அதிகரிப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசாங்கமும் ஒரு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X