நாடு தழுவிய தானிய சேமிப்பு வசதி: போடியில் அமைகிறது முதல் கிடங்கு
நாடு தழுவிய தானிய சேமிப்பு வசதி: போடியில் அமைகிறது முதல் கிடங்கு

நாடு தழுவிய தானிய சேமிப்பு வசதி: போடியில் அமைகிறது முதல் கிடங்கு

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை : உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சேமிப்பு கிடங்குகள் கட்ட, மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 மாவட்டங்களில், தேனி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள போடியில், தமிழகத்தின் முதல் கிடங்கு
 First warehouse of country-wide grain storage facility to be set up at Bodi  நாடு தழுவிய தானிய சேமிப்பு வசதி: போடியில் அமைகிறது முதல் கிடங்கு

சென்னை : உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சேமிப்பு கிடங்குகள் கட்ட, மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 மாவட்டங்களில், தேனி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள போடியில், தமிழகத்தின் முதல் கிடங்கு அமைக்கப்படுகிறது.

இந்திய உணவு கழகம், விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. இதன் சார்பில் தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.

போதிய கிடங்கு வசதி இல்லாததால், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. மழையின்போது, அவை நனைந்து பாழாகின்றன. இதே நிலை நாடு முழுதும் காணப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு, 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் நிலையில், 14.50 கோடி டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகளே உள்ளன. இதனால், தானியங்களை சேமிக்க முடியாமல் வீணாகின்றன.

இதை தடுக்க, மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுதும், 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. மொத்தம், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை, இம்மாதம், 1ம் தேதி ஒப்புதல் அளித்தது.

வேளாண் அமைச்சகம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, கூட்டுறவு அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி, வேளாண் உள்கட்டமைப்பு நிதியம், வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில், 4,453 உட்பட நாடு முழுதும், 1 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்கள் சார்பில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படுமானால், உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு வசதி உள்ள நாடாக, இந்தியா மாறும்.

முதல் கட்டமாக நாடு முழுதும், 10 மாவட்டங்களில், இத்திட்டம் சோதனை ரீதியாக செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக, தேனி மாவட்டம், போடி அருகில் சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, 1,000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டடப்பட உள்ளது.

இதற்காக நான்கு ஏக்கர் அடையாளம் காணப்பட்டு, ஒரு ஏக்கரில் கிடங்கு கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த இடத்தை, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான, 'நாப்கான்' ஆய்வு செய்துள்ளது.

விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும், விரைவில், 2 கோடி ரூபாய் செலவில் சாலை, போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்பட உள்ளது. அங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

ஒவ்வொரு தொடக்க கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு கட்டப்படுவதால், நாடு முழுதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும்; விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்; தானியங்கள் வீணாவது தடுக்கப்படும்; இந்திய உணவு கழகத்தின் சுமையும் குறையும்.

விவசாயிகளுக்கும் போக்குவரத்து செலவு போன்றவை குறைந்து, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

mindum vasantham - madurai,இந்தியா
06-ஜூன்-202317:32:56 IST Report Abuse
mindum vasantham iim trichy தமிழகத்திற்கு கொண்டு வந்தது பிஜேபி தான்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜூன்-202317:07:39 IST Report Abuse
Bhaskaran இந்திய உணவு கழகத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் குடோன்களைக்கட்டி தானியங்களை சேமிக்க ஏற்பாடு செய்து உணவுப் பஞ்சத்தை ஒழித்த சி.சுப்பிரமணியம் அவர்களை இந்தியர்கள் நன்றியுடன் நினைவுகூரவேண்டும்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
06-ஜூன்-202317:01:10 IST Report Abuse
spr காலம் கடந்த ஒன்றே எனினும் இப்பொழுதாவது நடக்கிறதே அதனால் பாராட்டுவோம். இதைத் தவிர இதே போல விவசாயிகள் தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்கவும் தேவையான இடமறிந்து எடுத்துச் சென்று விற்க ஏற்ற வகையில் குறைந்த கட்டணத்தில் ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் உருவாக்கப்பட வேண்டும். காய்கறிகள் பழங்கள் போன்றவற்றையும் வைக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு கூட்டல் முறையில் உருமாற்ற கற்றுக் கொடுக்கப்பட ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் கட்டணம் முடிவு செய்தல் ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிந்து அறிவுரை செய்தல் போன்ற பணிகள் கூட்டுறவு விவசாய சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் ஆனால் பெரும்பாலும் ஊழல் மற்றும் கொள்ளையடிப்பது இது போன்ற கட்டிடங்கள் கட்டுவதிலேயே நடப்பதால் மாநிலக் கட்சிகள் அதில் பயனடைவது மத்திய அரசு மறைமுகமாக மாநில ஆளும் கட்சிக்கு கொடுக்கும் லஞ்சமாகவே ஆகிறது அதனைக் கண்காணிக்க வேண்டும் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் வேண்டாத சர்ச்சையில் ஈடுபட்டுப் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் (எப்படியும் பேர் கெடப்போகிறது. நல்ல செயலுக்காக கெடட்டுமே ) மத்திய அரசு முதலீடு செய்யும் இது போன்ற திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனக் கண்காணித்து மக்கள் பயனடைய உதவ வேண்டும் இதனால் அவரையும் அந்தந்த மாநில ஆளும் கட்சி அரவனைத்துச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X