விற்பனை பத்திரம் இழுபறியால் முதியோர் அவதி!
விற்பனை பத்திரம் இழுபறியால் முதியோர் அவதி!

விற்பனை பத்திரம் இழுபறியால் முதியோர் அவதி!

Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
''விற்பனை பத்திரத்தை வழங்காம இழுத்தடிக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''கோவை மாவட்டத்துல, வீட்டு வசதி வாரியத்துல வீடுகள் வாங்கியவங்க, முழு தொகையை கட்டியும், பத்திரங்களை தராம இழுத்தடிக்கிறாங்க... இப்படி, 2,000க்கும் மேற்பட்டோருக்கு மாசக் கணக்கா விற்பனை பத்திரத்தை வழங்காம அலைக்கழிக்கிறாங்க பா...''அதே நேரம், புரோக்கர்கள் மூலமா வர்ற பைல்களை மட்டும்,
Old people suffer due to sale deed drag!  விற்பனை பத்திரம் இழுபறியால் முதியோர் அவதி!

''விற்பனை பத்திரத்தை வழங்காம இழுத்தடிக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டத்துல, வீட்டு வசதி வாரியத்துல வீடுகள் வாங்கியவங்க, முழு தொகையை கட்டியும், பத்திரங்களை தராம இழுத்தடிக்கிறாங்க... இப்படி, 2,000க்கும் மேற்பட்டோருக்கு மாசக் கணக்கா விற்பனை பத்திரத்தை வழங்காம அலைக்கழிக்கிறாங்க பா...

''அதே நேரம், புரோக்கர்கள் மூலமா வர்ற பைல்களை மட்டும், 'கிளியர்' பண்ணி, உடனுக்குடனே பத்திரங்களை குடுத்துடுறாங்க... பொறியாளர்கள் துவங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரைக்கும், லஞ்சத்துல மூழ்கி திளைக்கிறாங்க பா...

''பயனாளர்கள் பெரும்பாலும் வயசானவங்களா தான் இருக்காங்க... பத்திரம் கேட்டு போற இவங்களை, அலுவலக அதிகாரிகள் மரியாதை குறைவாகவும் நடத்துறாங்க... இதனால, அவங்க கடும் மன உளைச்சல்ல தவிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''காசு இருந்தா தான், இந்த கவர்மென்ட்ல எந்த வேலையும் நடக்கும்னு சொல்லும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

HoneyBee - Chittoir,இந்தியா
06-ஜூன்-202310:02:35 IST Report Abuse
HoneyBee கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் தான் முதலில்.. மற்றவை எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
06-ஜூன்-202308:54:40 IST Report Abuse
Godyes தேர்தலில் வாக்கு கேட்க வருபவரிடம் உங்களுக்கு வாக்களித்தால் லஞ்சம் வாங்க மாட்டோம் ஊழல் செய்யமாட்டோம் சாராயம் இல்லாமல் செய்வோம் சிலை வைத்து கடலை கெடுக்க மாட்டோம். வள்ளுவர் கோட்டத்தில் வீணாக நிற்க வைத்திருக்கும் தேரை ஓட விடுவோம்.இலவசங்களை கொடுத்து விட்டு வாங்கும் மக்களை கிண்டல் செய்யமாட்டோம் என்று எழுத்து மூலமான வாக்குறுதிகளை தரவேண்டும்.அதில் தேர்தலில் நிற்பவர் கையொப்பம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை ஒவ்வொரு வாக்காளரும் கேட்க வேண்டும்.தவறினால் எங்கள் வாக்குகள் அப்படி இணங்கி வருபவர்களிடம் சென்று விடும் என ஆணித்தரமாக வற்புறுத்துவது காலத்தின் கட்டாயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X