பெரம்பலுார்; அரியலுார் அருகே, சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழை கொடுத்து பத்திரம் பதிவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மலர்க்கொடி. இவர்களுடைய மகள் வினிதா.
இந்நிலையில் தேளூர் காலனி தெருவை சேர்ந்த சேகர்,50, என்பவர் தான் அனுபவித்து வந்த இடத்தை மலர்கொடி மற்றும் வினிதாவுக்கு விற்பனை செய்ய உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டது. மலர்கொடி மற்றும் அவரது மகள் வினிதா ஆகியோர் அங்கிருந்து முட்களை அகற்றினர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இந்த இடத்தை தாங்கள் வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.டி.ஓ.,விடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில் ஆவணத்தில் இணைக்கப்பட்ட தடையின்மை சான்று போலியாக தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, கயர்லாபாத் போலீசில் உடையார்பாளையம் சார் பதிவாளர் பொறுப்பு சாந்தகுமார், 44 ,கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்