பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்எஸ்டி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். போதை மருந்து விற்பனையாளர்களை குறி வைத்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இவை சிக்கி உள்ளது.கடந்த 2 தசாப்தங்களில், சோதனையில், இந்தளவு அதிகளவு போதை மருந்து சிக்கியது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நகரங்களில்,
In Biggest-Ever Drug Raid, Agency Seizes LSD Worth Thousands Of Croresபல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

மும்பை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்எஸ்டி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். போதை மருந்து விற்பனையாளர்களை குறி வைத்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இவை சிக்கி உள்ளது.

கடந்த 2 தசாப்தங்களில், சோதனையில், இந்தளவு அதிகளவு போதை மருந்து சிக்கியது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நகரங்களில், மாணவர்கள் உட்பட 6 பேரை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட கார்டெல் என்பவரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்தனர். கார்டெல், ‛டார்க்நெட்' மூலம் போதை மாத்திரை குறித்து விளம்பரம் செய்து, விருப்பம் தெரிவிப்பவர்களை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கடந்த மாதம் போதைப்பொருள் அதிகாரிகள், இந்திய கடற்படையுடன் நடத்திய ஆய்வில் 2,525 கிலோ மதிப்புள்ள மெதம்பேடமைன் எனும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.


கடந்த 2022 பிப் முதல், ‛சமுத்ராகுப்தா' என்ற பெயரில் போதைப்பொருள் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 ஆயிரம் கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
06-ஜூன்-202318:25:51 IST Report Abuse
Varadarajan Nagarajan போதைப்பொருள் கடத்தல்மூலம் கிடைக்கும் வருமானம் உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. பல மாநிலங்கள் இந்த விஷயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. சமீப காலமாக பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வழியாக இலங்கைகும் கடத்தப்படுகிறது. தமிழகத்திலும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க தேவையான சட்ட திருத்தும் கொண்டுவரவேண்டும். உலகத்தில் பல நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
06-ஜூன்-202312:55:03 IST Report Abuse
Apposthalan samlin சவூதி அரேபியா வில் போதை மருந்து கடத்தலுக்கு தூக்கு தண்டனை நமது நாட்டில் மட்டும் தான் உடன் ஜாமீன்
Rate this:
Cancel
Sudarsan R -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202312:50:13 IST Report Abuse
Sudarsan R Dont expert any findings. It will spoil international relationship, election prospects. We will voice our STRONG CONCERNS in G20 G7 meetings
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X