ஒடிசா ரயில் விபத்து: சி.பி.ஐ., வழக்குப்பதிவு
ஒடிசா ரயில் விபத்து: சி.பி.ஐ., வழக்குப்பதிவு

ஒடிசா ரயில் விபத்து: சி.பி.ஐ., வழக்குப்பதிவு

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. சி.பி.ஐ., அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 2ம் தேதி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இதில் 278 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும்
Cause Of Odisha Train Crash That Killed 278 Still Unknown, CBI Steps Inஒடிசா ரயில் விபத்து: சி.பி.ஐ., வழக்குப்பதிவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. சி.பி.ஐ., அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.


ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 2ம் தேதி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இதில் 278 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.


இந்த பரிந்துரையை ஏற்று, இன்று (ஜூன் 6) சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஒடிசா சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், அம்மாநில போலீசாரிடம் இருந்து, ரயில் விபத்து தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, விசாரணையை துவக்கிய அவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை முக்கியமானது எனக்கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள், அதன் மூலம் இந்த விபத்தில் சதிச்செயல் நடந்துள்ளதா என்பது குறித்து கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-ஜூன்-202308:15:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் விபத்து நடந்த 20 மணிநேரத்தில் அதன் தடயமே இல்லாமல் அனைத்தையும் வழித்து அப்புறப்படுத்தி, பிரதமரின் பயணுத்துக்கு ஹெலிபேட் போட்டார்கள். அடுத்த நாள் வந்தே பாரத் ரயிலும் விட்டாச்சு. அவசரகதியில் தடயங்களை அழித்து விட்டு சிபிஐ விசாரணை என்று திசை திருப்புவது பழியை இன்னொருவர் மேல் போடும் பகிரங்க மிரட்டல் தான். ஒழுங்கான பராமரிப்பு இருந்தால் தான் எந்த உபகரணமும் தனது வேலையை செய்யும். பராமரிக்காத மூன்றாம் தர உபகரணங்கள் தான் தவறாக வேலை செய்து விபத்துக்கள் நிகழ்கின்றன என்ற காட்டமான சிஜிஐ அறிக்கையை மறைத்து வக்கிரமான அரசியல் செய்கிறது அரசு. இதனால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ?
Rate this:
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202320:26:18 IST Report Abuse
tamilvanan அலஹாபாத் (இப்போது பிரயாக் ) ஹைகோர்ட் ஜாதகம் பற்றி கூறியது ஒரு டிவோர்ஸ் வழக்கில். இந்த வழக்கில் மனைவிக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்வித்தனர் என்று கூறியது உண்மையா என்று கண்டறிய சோதிட விற்பன்னர்களின் துணை வேண்டும் என்று கூறியது. இதில் என்ன தவறு?
Rate this:
06-ஜூன்-202322:47:28 IST Report Abuse
ராஜாவேண்டுமானால் நீயும் ஒரு செவ்வாய் தோஷமுள்ள பெண்ணை திருமணம் செய்து உயிரோடு இருந்து வழக்கு நடத்திப்பார். பெயரில் தமிழ் என்று இருந்தாலே உபி தான் போல....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-ஜூன்-202320:09:16 IST Report Abuse
M  Ramachandran பட்டேல் பிரதமர் பொசிசன் எடுத்திருந்தால் இந்த தீவிரவாத கும்பல் ஆதரிக்கும் பாகிஸ்தான் எப்பயோ காணாமல் போயிருக்கும். மத திமிர் பிடித்த கும்பல் வால் ஓட்ட நறுக்க பட்டிருக்கும். காந்தி செய்த தவறு மற்றும் நேரு நெஞ்சு தைரியம் இல்லாதவர் அயல் நாடுகளைய்ய கண்டு அஞ்சி நடுங்கும் பேர்வழி. பக்கத்திலிருந்த கரும் பூதம் சீனாவைய்ய கூட எடை போட திறனில்லாதவர். ஆனால் இந்திராவின் நெஞ்சுரம் போராட்ட தக்கது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X