மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள்: சமஸ்கிருத மொழி அறிஞர் வேண்டுகோள்
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள்: சமஸ்கிருத மொழி அறிஞர் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள்: சமஸ்கிருத மொழி அறிஞர் வேண்டுகோள்

Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (36) | |
Advertisement
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011ல் கணக்கெடுக்கப்பட்டது. இதில், பெயர், பாலினம், மதம், தாய் மொழி, தெரிந்த மொழிகள் உள்ளிட்ட பல கூறுகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. தற்போது 2023 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பற்றி சமஸ்கிருத மொழி அறிஞரும், 17 புத்தகங்களை
Also Mention Sanskrit in Census 2023: Sanskrit Scholar Requestமக்கள்தொகை கணக்கெடுப்பில் சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள்: சமஸ்கிருத மொழி அறிஞர் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011ல் கணக்கெடுக்கப்பட்டது. இதில், பெயர், பாலினம், மதம், தாய் மொழி, தெரிந்த மொழிகள் உள்ளிட்ட பல கூறுகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. தற்போது 2023 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பற்றி சமஸ்கிருத மொழி அறிஞரும், 17 புத்தகங்களை எழுதியவருமான மிர்துல் கீர்த்தி சில கருத்துகளை முன் வைத்துள்ளார்.



அவர் தெரிவித்ததாவது: 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதிகாரிகள் விரைவில் உங்கள் வீட்டிற்கே வந்து தகவல்களை பெற உள்ளனர். அதில், உங்கள் தாய் மொழி குறித்தும், உங்களுக்கு தெரிந்த வேறு மொழிகள் குறித்தும் கேள்வி கேட்பார்கள். அப்போது உங்கள் தாய் மொழியை தவிர்த்து நீங்கள் பேசும் அல்லது அறிந்த மொழியாக சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள். ஏனெனில், சமஸ்கிருதத்தை நீங்கள் முழுவதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் அதனை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. ஆம், பாடுவதன் மூலமாகவோ, மந்திரங்கள் உச்சரிப்பது மூலமாகவோ, வழிபடுவதன் மூலமோகவோ, நாம் தினமும் சமஸ்கிருத மொழியை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். பலரும் தங்கள் பள்ளிகளில் அம்மொழியை படித்து வருகின்றனர்.



latest tamil news

அப்படி இருக்கையில், சமஸ்கிருத மொழியை குறிப்பிடுவது முக்கியமானது. ஏனெனில் கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாடு முழுவதும் வெறும் 2000 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியை பேசுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் அரபி மொழியை 50 ஆயிரம் பேரும், பெர்சியன் மொழியை 12 ஆயிரம் பேரும் பேசுவதாக கூறியுள்ளனர். இந்த மொழிகள், அவற்றின் வளர்ச்சிக்கு நிதியை பெறுகின்றன. ஆனால், நமது சொந்த கலாசாரத்தின் அடித்தளமான சமஸ்கிருத மொழி மெதுவாக மறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தால், சமஸ்கிருதம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுவிடும். நமது பாரம்பரியத்தை வாழ வைப்பது நம் கையில் தான் உள்ளது. சமஸ்கிருதம் என்ற சொல்லைக் குறிப்பிட்டுச் சொன்னாலே போதும். தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
07-ஜூன்-202319:00:35 IST Report Abuse
Velan Iyengaar மொழி என்பது அதை கற்போருக்கு விசால புத்தி தரவேண்டும். அதில் உள்ள இலக்கியம் நாவல்.. கட்டுரை.. எல்லாம் ... எல்லாம் அதை படிப்பவர் மனதில் ஒரு பரந்த விசாலமான மற்றும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் அரவணைத்துச்செல்லும் வகையிலான அறிவை தரவேண்டும்.
Rate this:
Cancel
Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
07-ஜூன்-202318:27:04 IST Report Abuse
Velan Iyengaar மொழி அற்புதம்.
Rate this:
Cancel
Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
07-ஜூன்-202318:24:52 IST Report Abuse
Velan Iyengaar பிரிவினை விதைத்த மொழி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X