சென்னை:ஒடிசா ரயில் விபத்தில் உயிர்களைக் காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற காரணமாக இருந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன்;
உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன;
மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.