தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும்(ஜூன் 06), நாளையும்(ஜூன் 07) அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இதனால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும்(ஜூன் 06), நாளையும்(ஜூன் 07) அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இதனால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




latest tamil news



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:


தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும் (ஜூன் 06), நாளையும்(ஜூன் 07) அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இதனால் தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



latest tamil news


கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று(ஜூன்06) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

06-ஜூன்-202319:58:46 IST Report Abuse
குமரி குருவி கேட்டு கேட்டு புளித்துப் போனசெய்தி
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
06-ஜூன்-202316:45:56 IST Report Abuse
raghavan என்னமோ போன மாதமே வெப்ப அலை ஓய்ந்தது என்று சொன்னார்கள். அப்படியே போய்க் கொண்டு உள்ளதே. என்றுதான் முடியுமாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X