ரயில் பெட்டியில் திடீர் புகை: பயணிகள் அச்சம்
ரயில் பெட்டியில் திடீர் புகை: பயணிகள் அச்சம்

ரயில் பெட்டியில் திடீர் புகை: பயணிகள் அச்சம்

Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புவனேஸ்வர்: செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏசி பெட்டியில் தீடிரென புகை கிளம்பியது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள், ரயிலில் இருந்து இறங்கினர்.அசாம் மாநிலம் அகர்தலாவில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத்திற்கு வந்து கொண்டிருந்த செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீடிரென புகை கிளம்பியது. இதனால், அச்சம் அடைந்த பயணிகள் அலறினர்.
Smoke from AC coach on Secunderabad-Agartala Express halts train in Odishas Brahmapur stationரயில் பெட்டியில் திடீர் புகை: பயணிகள் அச்சம்


புவனேஸ்வர்: செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏசி பெட்டியில் தீடிரென புகை கிளம்பியது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள், ரயிலில் இருந்து இறங்கினர்.
அசாம் மாநிலம் அகர்தலாவில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத்திற்கு வந்து கொண்டிருந்த செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீடிரென புகை கிளம்பியது. இதனால், அச்சம் அடைந்த பயணிகள் அலறினர். ரயில் உடனடியாக ஒடிசாவின் பிரஹம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் உடனடியாக வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் வயர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வந்தது தெரிந்தது.
பிரச்னை சரி செய்யப்பட்டதும், அந்த பெட்டியில் ஏற பயணிகள் மறுத்தனர். வேறு பெட்டியை சேர்த்தால் தான் பயணிப்போம் எனக்கூறினர். அதிகாரிகள் அவர்களுடன் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
06-ஜூன்-202321:37:13 IST Report Abuse
MARUTHU PANDIAR இன்னும் பல ரயில்களில் மழை நீர் கூட மேற்கூரையிலிருந்து ஒழுகுவதை பார்க்கலாம்+++சமீபத்தில் நாகர்கோவில் சென்னை வண்டியில் பின் இரவு பெய்தது+++ மழை நீரில் நனையாமல் இருகப்பதற்காக எ.சி பெட்டியில் உள்ள மின் சப்ளை பேனலில் உள்ள சுவிச்சுக்களை அவசர அவசரமாக பாலித்தின் ஷீட்டுகளால் பணியில் இருந்த மெக்கானிக் மூடி வைத்து மழை நீர் உள்ளே செல்லாமல் அப்போதைக்குச் சமாளித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்++++ மின் சப்ளை சுவிச்சுக்களுக்குள் மழைநீர் சென்றிருந்தால்?
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
06-ஜூன்-202319:22:05 IST Report Abuse
R S BALA என்னடா இது ஒரே சோதனையா இருக்குது..
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஜூன்-202319:09:21 IST Report Abuse
g.s,rajan In India Time is not Good for the Railways now.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X