ரூ.40 கோடி குறைத்து காட்டினோம் : பி.பி.சி., நிறுவனம் ஒப்புதல்
ரூ.40 கோடி குறைத்து காட்டினோம் : பி.பி.சி., நிறுவனம் ஒப்புதல்

ரூ.40 கோடி குறைத்து காட்டினோம் : பி.பி.சி., நிறுவனம் ஒப்புதல்

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி :வருமான வரித் துறை கணக்கு தாக்கலின்போது, 40 கோடி ரூபாய்க்கான கணக்கை குறைத்து காட்டியுள்ளதை, பி.பி.சி., நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி.சி., எனப்படும் ஊடக நிறுவனம், குஜராத் வன்முறை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது.
We understated Rs 40 crore: BBC, company confesses  ரூ.40 கோடி குறைத்து காட்டினோம் : பி.பி.சி., நிறுவனம் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :வருமான வரித் துறை கணக்கு தாக்கலின்போது, 40 கோடி ரூபாய்க்கான கணக்கை குறைத்து காட்டியுள்ளதை, பி.பி.சி., நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி.சி., எனப்படும் ஊடக நிறுவனம், குஜராத் வன்முறை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், இந்தாண்டு பிப்., மாதத்தில், பி.பி.சி., நிறுவனத்தின் புதுடில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் ஆய்வு செய்தனர். வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்தன.

இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியத்துக்கு, 'இ மெயில்' ஒன்றை, பி.பி.சி., நிறுவனம் அனுப்பியுள்ளது. அதில், 40 கோடி ரூபாய் வருவாயை குறைத்து காட்டியுள்ளதை ஒப்புக் கொள்வதாக அந்த நிறுவனம் கூறிஉள்ளது.


இது குறித்து, வருமான வரித் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:சட்ட விதிகளுக்கு உட்பட்டே, பி.பி.சி., நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும். இ - மெயில் வாயிலாக பதிலளிப்பதை ஏற்க முடியாது.குறைத்து காட்டிஉள்ளதால், வரிக் கணக்கை அநத் நிறுவனம் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு, குறைத்து காட்டியுள்ள தொகைக்கான வரி, அபராதம் மற்றும் அதற்கான வட்டியை செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

07-ஜூன்-202313:02:02 IST Report Abuse
மு. செந்தமிழன் இப்பொழுது புரிகிறதா இந்திய வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாத வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியர்களின் ஒற்றுமையை குலைக்க வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றன. ஹிண்டன் பார்க் நிறுவனமும் இப்படித்தான் அதானி குழுமம் மீது குற்றம் சாட்டியது நிறுவனம் தனது தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்கு முன்னாள் பங்குகள் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இது தான் வெளிநாட்டு நிறுவனங்கள் யுக்தி, இதற்கு இங்குள்ள மிஷனரிகள் மற்றும் பாய்ஸ் ஆதரவு உள்ளது.
Rate this:
Cancel
07-ஜூன்-202310:46:28 IST Report Abuse
மான் இநாத BBC மற்றும் இவனோட ஜால்ரா IBC ரெண்டு பேரும் திருட்டு நாரப் பயலுக.... இந்த ரெண்டு ஜெர்மன் ஷெஃபர்ட்களையும் வாழ்நாள் சிறையில் அடைக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சகயை பொறுக்க முடியாத
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் - Vellore,இந்தியா
07-ஜூன்-202306:58:07 IST Report Abuse
ரவிச்சந்திரன் நம்முடைய சட்டத்தை ஏமாற்றிய வெளி நாட்டு ஊடகத்தை நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X