குப்பை குவியுது... தண்ணீர் வீணாகுது!
குப்பை குவியுது... தண்ணீர் வீணாகுது!

குப்பை குவியுது... தண்ணீர் வீணாகுது!

Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
குப்பை அள்ளுங்க...திருப்பூர், 46வது வார்டு, அமர்ஜோதி பொன் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அருகிலேயே தொட்டி இருந்த போது, குப்பையை ரோட்டில் வீசி எறிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜயகுமார், அமர்ஜோதி பொன்நகர். (படம் உண்டு)திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப், ஆவின் பூத் அருகே குப்பை கொட்டப்படுகிறது. மாநகராட்சி குப்பை அள்ள வேண்டும்.
Garbage accumulates... water is wasted!   குப்பை குவியுது... தண்ணீர் வீணாகுது!

குப்பை அள்ளுங்க...

திருப்பூர், 46வது வார்டு, அமர்ஜோதி பொன் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அருகிலேயே தொட்டி இருந்த போது, குப்பையை ரோட்டில் வீசி எறிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விஜயகுமார், அமர்ஜோதி பொன்நகர். (படம் உண்டு)

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப், ஆவின் பூத் அருகே குப்பை கொட்டப்படுகிறது. மாநகராட்சி குப்பை அள்ள வேண்டும். இவ்விடத்தில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)

திருப்பூர், 22வது வார்டு, சிங்காரவேலன் நகரில் குப்பை தொட்டி அருகில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை.

- மனோகரன், சிங்காரவேலன் நகர். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் டவுன்ஹால் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் அவ்வப்போது வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், டவுன்ஹால். (படம் உண்டு)

சாலையை சீரமைக்கலாமே!

திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர்பந்தல் காலனி, டிஸ்ேஸா ஸ்கூல் சாலையில் மழைநீர் தேக்கத்தால், சாலை சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- அசோக், தண்ணீர்பந்தல்காலனி. (படம் உண்டு)

திருப்பூர், பொம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து நெருப்பெரிச்சல் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.

- சங்கர்சதீஷ், பொம்மநாயக்கன்பாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

குப்பை அள்ளிட்டாங்க...

திருப்பூர், வினோபா நகர், தண்ணீர் டேங்க் அருகே, அள்ளப்படாமல், தேங்கியிருந்த குப்பை குறித்து செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி துாய்மை ஊழியர்கள், குப்பையை அள்ளி சென்று விட்டனர்.

- கருப்புசாமி, வினோபாநகர். (படம் உண்டு)

மின்சாரம் மிச்சமானது!

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின் வீதியில், பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகி வந்தது. 'தினமலர்' செய்தி வெளியிட்ட பின், தெருவிளக்கு அணைக்கப்பட்டு விட்டது.

- விஸ்வநாதன், பி.என்., ரோடு. (படம் உண்டு)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X