அரிசி கொம்பனை இங்க கொண்டு வாங்க.. சின்னக்கானல் மக்கள் போராட்டம்
அரிசி கொம்பனை இங்க கொண்டு வாங்க.. சின்னக்கானல் மக்கள் போராட்டம்

அரிசி கொம்பனை இங்க கொண்டு வாங்க.. சின்னக்கானல் மக்கள் போராட்டம்

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதிக்கு அரிசி கொம்பனை திரும்ப கொண்டு வர வலியுறுத்தி செண்பகதொழு குடியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் உயிர் பலி உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் ஏப்.29ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி பெரியாறு புலிகள்
Bring rice komban here... Chinnakanal peoples protest  அரிசி கொம்பனை இங்க கொண்டு வாங்க.. சின்னக்கானல் மக்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதிக்கு அரிசி கொம்பனை திரும்ப கொண்டு வர வலியுறுத்தி செண்பகதொழு குடியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.

சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் உயிர் பலி உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் ஏப்.29ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விட்டனர்.

அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை மே 27ல் கம்பம் நகரில் ஆக்ரோஷத்துடன் வலம் வந்தது. எதிரே வந்த முதியவரை தள்ளியதில் அவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து குமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் கொண்டு விட்டனர்.


latest tamil news

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை 24 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர், தீவனம் எதுவும் உட்கொள்ளவில்லை. அதனை பார்த்து பரிதாபமடைந்த சின்னக்கானல் அருகே செண்பக தொழு குடியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அரிசி கொம்பனை சின்னக்கானல் பகுதிக்கு திரும்ப கொண்டு வருமாறு வலியுறுத்தி சூரிய நல்லி, போடிமெட்டு ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செயல் தொடர்ந்தால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

07-ஜூன்-202316:14:49 IST Report Abuse
குமரி குருவி இதுதான் ஆனைக்கொருகாலமோ...
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
07-ஜூன்-202315:38:39 IST Report Abuse
SENTHIL NATHAN யானை போன்ற மிருகங்களுக்கு எண்டதை வித தொந்தரவும் தராமல் இருந்தால் அதனால் மனித குலத்திற்கு மேலும் நன்மை தான்
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
07-ஜூன்-202313:20:33 IST Report Abuse
karupanasamy விடியலை என்னிக்கு குடிகார தமிழர்கள் வாக்களித்து முதலமைச்சர் ஆக்கினார்களோ அந்த விநாடியிலிருந்து தமிழகம் அழிவுப் பாதையில் சென்றுகொண்டு இருக்கின்றது. சாமுவேல் ராஜசேகரைப் போன்ற ஒரு செய்தி வராதா என்று மக்கள் ஏங்குகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X