பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஜூன் 07) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட

புதுடில்லி: நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




latest tamil news

புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஜூன் 07) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.



இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.


* நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்வு


* சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்வு



latest tamil news

* மக்கா சோளம்- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,310ல் இருந்து ரூ.2,090 ஆக உயர்வு


* கேழ்வரகு- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,550 ல் இருந்து ரூ.3,846 ஆக உயர்வு


* துவரம் பருப்பு- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,350ல் இருந்து ரூ.7,ஆயிரம் ஆக உயர்வு


* 2014-15,ல் ரூ.4.350ல் இருந்த துவரம் பருப்புக்கான ஆதரவு விலை தற்போது ரூ.7ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


* பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்,மெட்ரோ இணைப்புக்கு ரூ.5,452 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

07-ஜூன்-202316:04:59 IST Report Abuse
குமரி குருவி தேங்காய் மாங்காய் பலா வாழைஇன்னும் பல விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்சவிலை நிர்ணயம் அவசியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X