மாற்றத்தின் மனநிலையில் மக்கள்: சொல்கிறார் சரத்பவார்
மாற்றத்தின் மனநிலையில் மக்கள்: சொல்கிறார் சரத்பவார்

மாற்றத்தின் மனநிலையில் மக்கள்: சொல்கிறார் சரத்பவார்

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
மும்பை: கர்நாடகா தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.இது குறித்து, சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜ.,
Sharad Pawar Says Anti-BJP Wave In Country மாற்றத்தின் மனநிலையில் மக்கள்: சொல்கிறார் சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: கர்நாடகா தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.



இது குறித்து, சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜ., தோல்வி அடைந்தது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.


இதே போல், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலும், மஹாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தலிலும் பாஜ., தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் உள்ளனர். மக்களின் இந்த மனநிலை தொடர்ந்தால், வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டில் ஒரு நல்ல மாற்றம் இருக்கும். இதைச் சொல்ல எந்த ஜோதிடரும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் தெருக்களில் திரண்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.


இது குறித்து சரத்பவார் கூறுகையில், ஆளும் கட்சியினரும், மக்களும் வீதிக்கு வந்து இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தினால் அது நல்லது அல்ல. இதுபோன்ற செயல்களை ஆளும் கட்சியினர் ஊக்குவிக்கின்றனர். இதனுடன், மாநிலத்தில் விவசாயம் தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. பருத்தி பயிரிடும் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

ramani - dharmaapuri,இந்தியா
08-ஜூன்-202305:20:18 IST Report Abuse
ramani அப்போ சந்தேகமே இல்லை. பாஜக பெரும் வெற்றி பெறும்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-202322:22:48 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாஜக அங்கே செல்வாக்கை இழந்துவிட்டது என்பது உண்மைதான் .... அதேசமயம் மக்கள் உங்களையும் (மராட்டிய கட்டுமரம்) நம்பத்தயாரில்லை .........
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-ஜூன்-202319:17:48 IST Report Abuse
duruvasar மராட்டி கருணாநிதியும் தன் வாரிசை அரியணையில் உட்கார வைப்பதற்காக தந்தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது இவரின் பேச்சில் நன்றாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X