டில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம்: கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் ஆதரவு
டில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம்: கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் ஆதரவு

டில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம்: கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் ஆதரவு

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
லக்னோ: டில்லி மாநில அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தினை எதிர்க்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.டில்லி மாநில அரசு அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றும் மற்றும் நிறைவேற்றும் அதிகாரம் டில்லி மாநில அரசுக்கு உள்ளது என கூறியது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: டில்லி மாநில அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தினை எதிர்க்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.




latest tamil news

டில்லி மாநில அரசு அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றும் மற்றும் நிறைவேற்றும் அதிகாரம் டில்லி மாநில அரசுக்கு உள்ளது என கூறியது. இதனை எதிர்த்து மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை இயற்றியது.


இதற்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி எம்.பிக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். டில்லி அரசுக்கு ஆதரவு கோரி பாஜ., ஆளாத அனைத்து மாநில முதல்வரையும் சந்தித்து பேச கெஜ்ரிவால் திட்டமிட்டு உள்ளார்.


அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டில்லி முதல்வர், பஞ்சாப் முதல்வர் மற்றும் ஆம்ஆத்மி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து, உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில், இன்று(ஜூன் 07) கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர்.



latest tamil news

பின்னர், அகிலேஷ் யாதவ் மற்றும் கெஜ்ரிவால் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. டில்லி அரசுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிக்கும். பாஜ., அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்தால், இந்த அவசரச் சட்டம் ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்படலாம், 2024ல் பாஜ. அரசு ஆட்சிக்கு வராது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Anand - chennai,இந்தியா
07-ஜூன்-202319:12:35 IST Report Abuse
Anand மோடிக்கு பயந்தவங்க எல்லாம் என்னை சுத்தி நில்லுங்க.......
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-ஜூன்-202317:55:15 IST Report Abuse
M  Ramachandran எல்ல குச்சு மிட்டைய்யகளும் குழந்தைய்க்கள் ஒன்று சேர்ந்து ஐஸ் ......... சப்பி கொள்ள வேண்டியது தான்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
07-ஜூன்-202317:51:01 IST Report Abuse
sankar பிரயோசனம் இல்லை மக்கா - மோடிஜி அவர்கள் எதை செய்தாலும் சரியாகவே செய்வார்கள் - விரைவில் டெல்லி சட்டசபை கலைக்கப்படும் - நிரந்தரமாக நேரடி ஜனாதிபதி நிர்வாகத்தில் வரும் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X