ஒடிசா : இன்ஜின் இல்லா  சரக்கு ரயில் ஏறி ஆறு தொழிலாளர்கள் பலி
ஒடிசா : இன்ஜின் இல்லா சரக்கு ரயில் ஏறி ஆறு தொழிலாளர்கள் பலி

ஒடிசா : இன்ஜின் இல்லா சரக்கு ரயில் ஏறி ஆறு தொழிலாளர்கள் பலி

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புவனேஸ்வரம்: மழைக்காக ரயிலின் கீழ் ஒதுங்கிய தொழிலாளர்கள் ஆறு பேர் மீது இன்ஜின் இல்லாத சரக்கு ரயில்ஏறியதில் பலியாயினர்.ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இதில் 275க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த துயர சம்பவ நினைவு மறையும் முன்னரே மீண்டும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் ஜஜ்பூர் பகுதியில் மழை பெய்து
Odisha: Six laborers killed by engineless freight train  ஒடிசா : இன்ஜின் இல்லா  சரக்கு ரயில் ஏறி ஆறு தொழிலாளர்கள் பலி



புவனேஸ்வரம்: மழைக்காக ரயிலின் கீழ் ஒதுங்கிய தொழிலாளர்கள் ஆறு பேர் மீது இன்ஜின் இல்லாத சரக்கு ரயில்ஏறியதில் பலியாயினர்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இதில் 275க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த துயர சம்பவ நினைவு மறையும் முன்னரே மீண்டும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசாவின் ஜஜ்பூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் இருந்து தப்பிப்பதற்காக தொழிலாளர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்த ரயிலின் கீழ் ஒதுங்கினர். ரயில் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் இன்ஜின் இல்லாமல் இருந்தது. இருப்பினும் பலத்த காற்று வீசியதன் காரணமாக சரக்கு ரயிலின் பெட்டிகள் தானாகவே நகர்ந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலின் சக்கரத்தில் சிக்கி ஆறு பேர் வரையில் பலியானதாகவும்,இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Krishnamoorthy Nilakantan - Michigan,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-202301:33:10 IST Report Abuse
Krishnamoorthy Nilakantan இதுதான் துரதிருஷ்டம் என்பது
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
07-ஜூன்-202323:40:33 IST Report Abuse
BALU இவ்வாறு ரயிலை நிறுத்தி வைக்கும் போது, ரயில் பெட்டிகள் நகராமல் இருக்க முதல் முன்பக்க சக்கரத்தின் இடையில் இரும்பினால் ஆன வெட்ஜ் ஆப்பு பொருத்தி இருப்பார்கள்.அப்படி செய்திருந்தால் பெட்டிகள் அசையாது.இவ்வாறு செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களைக் கொள்ளும் ரயில்வே ஊழியரை உடனடியாக பணிநீக்கம் செய்து ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07-ஜூன்-202320:15:12 IST Report Abuse
N Annamalai கொடுமைக்கு கொடுமை .என்ன ஒரு கேட்ட நேரம் ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X