செய்தியின் உண்மை தன்மை அமைப்பு: 'எடிட்டர்ஸ் கில்ட்' புது வழக்கு
செய்தியின் உண்மை தன்மை அமைப்பு: 'எடிட்டர்ஸ் கில்ட்' புது வழக்கு

செய்தியின் உண்மை தன்மை அமைப்பு: 'எடிட்டர்ஸ் கில்ட்' புது வழக்கு

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை : சமூக வலைதளங்களில் மத்திய அரசு தொடர்பாக வெளியிடப்படும் செய்திகளின் உண்மை தன்மையை அறிவதற்கான அமைப்பு உருவாக்கப்படுவதை எதிர்த்து, 'எடிட்டர்ஸ் கில்ட்' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொழில்நுட்ப விதிகளில் சமீபத்தில் திருத்தம்
New case of Editors Guild, a body of news veracity  செய்தியின் உண்மை தன்மை அமைப்பு: 'எடிட்டர்ஸ் கில்ட்' புது வழக்கு

மும்பை : சமூக வலைதளங்களில் மத்திய அரசு தொடர்பாக வெளியிடப்படும் செய்திகளின் உண்மை தன்மையை அறிவதற்கான அமைப்பு உருவாக்கப்படுவதை எதிர்த்து, 'எடிட்டர்ஸ் கில்ட்' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொழில்நுட்ப விதிகளில் சமீபத்தில் திருத்தம் செய்தது.


latest tamil news


இதன்படி, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போலியான செய்திகளைக் கண்டறிய ஓர் உண்மை தன்மை அறியும் அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது.

மத்திய அரசு தொடர்பாக பதிய, பகிரப்படும் செய்திகளில் போலியான, உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையைக் கண்டறியும் அதிகாரத்தை பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகளை எதிர்த்து, காமெடி நிகழ்ச்சிகளை நடத்தும் குனால் காம்ரா, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், எடிட்டர்ஸ் கில்ட் மற்றும் இந்திய பத்திரிகைகள் சங்கம் சார்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த புதிய அமைப்பை செயல்படுத்தும் நடவடிக்கையை, ஜூலை 5ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது.

நேற்று நடந்த விசாரணையின்போது, 'ஜூலை 7ம் தேதி இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்படும்' என, நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, புதிய அமைப்பை செயல்படுத்தும் நடவடிக்கையை, ஜூலை 10ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

08-ஜூன்-202304:30:52 IST Report Abuse
குமரி குருவி செய்தி உண்மைகள் தன்மைஊடங்களில் திரித்து பரப்பப்படுகிறது
Rate this:
Cancel
08-ஜூன்-202303:51:19 IST Report Abuse
V.Saminatha நிச்சயமாக அந்த சட்டம் வரவேண்டும்-பல யூட்யூப் சானல்கள் அரசின்சாதனைகளையும் நலழல திட்டங்களையும் குறுகிய இன மொழி மத வேறுபாடுகளை அவற்றுக்காக சேவை செய்வதாகக் பூறிக்கொண்டு திருடர்கள் எத்தர்கள் கொள்ளைக்காரர்பள் அயோக்கியர்களுடன் கூட்டணிசேர்ந்து அவர்கள் தான் மக்கள் உயர்வுக்கும்.நல்வாழ்வுக்கும் பாடுபடுவதாக பொய்ச்.செந்திகளை பரப்புகின்றன-எனவே இதுபோன்ற பாகுபாடான ஒருதலைபட்ச தகவல்களை தரும்.நிறுவனங்கள் கோமாளி ஷோக்களை பரப்ப முடியாதபடி சட்டம் இயற்றப்படுவதோடு அவர்களை மக்களே கல்லால் அடித்துக் கொல்லும் விதம் சட்டம் இயற்றப்பட வேண்டும்-ஒரு கல்வி அமைப்பையோ நிறுவனத்தையோ நல்ல நிறுவனமென வுளம்பரப்படுத்தும் பத்ரிகைகள் தடை செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X