பல கோடி ரூபாய் பாக்கி; முழிக்கும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்
பல கோடி ரூபாய் பாக்கி; முழிக்கும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்

பல கோடி ரூபாய் பாக்கி; முழிக்கும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
''பல கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்கா ஓய்...'' என, வந்ததுமே பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாருப்பா அவங்க...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர்ல, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு இருக்கு... இங்க அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட, தகுதி உள்ள பலர் குறைஞ்ச வாடகைக்கு பல வருஷமா குடியிருந்தா ஓய்...''இதுல பலர்,
Arrears of several crores of rupees; Crushing Housing Board Officials  பல கோடி ரூபாய் பாக்கி; முழிக்கும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்

''பல கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்கா ஓய்...'' என, வந்ததுமே பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாருப்பா அவங்க...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர்ல, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு இருக்கு... இங்க அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட, தகுதி உள்ள பலர் குறைஞ்ச வாடகைக்கு பல வருஷமா குடியிருந்தா ஓய்...


''இதுல பலர், 'ரிட்டையர்' மற்றும் வேறு ஊர்களுக்கு மாறுதல்ல போயிட்டாலும், வீட்டை காலி செய்யாம, உள்வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுண்டு இருந்தா... இப்ப, பழைய கட்டடங்களை இடிச்சிட்டு, புதுசா கட்ட வாரியம் முடிவு செஞ்ச தால, வீட்டை காலி செய்ய 'நோட்டீஸ்' அனுப்பினா ஓய்...


''எல்லாருமே உடனே காலி பண்ணிட்டா... பிரச்னை என்னன்னா, இப்ப பணியில் இருக்கற அரசு ஊழியர்கள் தவிர, மத்தவாள்லாம் வாடகை கட்டியே பல வருஷம் ஆறது ஓய்...


''வாடகை பணமே பல கோடி ரூபாய் பாக்கி இருக்கு... அவாள்லாம் எங்க இருக்கா, எப்படி வசூல் பண்றதுன்னு தெரியாம, வாரிய அதிகாரிகள் முழிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

08-ஜூன்-202304:27:27 IST Report Abuse
குஞ்சன்விளை ரவி வீட்டு வசதி வாரியம் ஊழியர்கள் சம்பளமின்றி பல ஆண்டுகளாகவேலை பார்ப்பதாக தகவல்
Rate this:
Cancel
08-ஜூன்-202303:43:42 IST Report Abuse
V.Saminatha முதல்ல வீட்டு வசதியையே தரஙழகுறைந்த வீடுகளை கட்டித்.தரும் அந்த வாரியத்தை இழுத்து மூடவும்-அதன் பெயரைச் சொல்லி பலதூறு கோடி ரூபாய்களை அரசு நிவாரண நிதி அளிப்பதாகக் கூறி அமைச்சன் கட்சிக்காரனே தின்பான்.
Rate this:
Cancel
Durai -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202301:16:12 IST Report Abuse
Durai can they not collect it from pension?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X