கோவில் வாயிலாக பசுமை வளம் புது திட்டம் துவக்கியது கேரள அரசு
கோவில் வாயிலாக பசுமை வளம் புது திட்டம் துவக்கியது கேரள அரசு

கோவில் வாயிலாக பசுமை வளம் புது திட்டம் துவக்கியது கேரள அரசு

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்,பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக, கேரளாவில் உள்ள 3,800க்கும் அதிகமான கோவில்களில் மரங்கள் வளர்த்து, குளங்களை பராமரிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு துவங்கியுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும்
The Kerala government has launched a new green resource scheme at the temple gate  கோவில் வாயிலாக பசுமை வளம் புது திட்டம் துவக்கியது கேரள அரசு



திருவனந்தபுரம்,பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக, கேரளாவில் உள்ள 3,800க்கும் அதிகமான கோவில்களில் மரங்கள் வளர்த்து, குளங்களை பராமரிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு துவங்கியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக, கடவுளின் அழகிய பசுமை இல்லங்கள் என பொருள்படும், 'தேவாங்கனம் சாருஹரிதம்' என்ற திட்டத்தை மாநில அரசு துவக்கியுள்ளது.


latest tamil news



சர்வதேச சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதி, மாநில தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் இத்திட்டத்தை மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து திருவாங்கூர் தேவசம் வாரிய தலைவர் கே.அனந்தகோபன் கூறியதாவது:

கேரள கோவில்களை, ஐந்து தேவசம் வாரியங்கள் நிர்வகித்து வருகின்றன. இந்த வாரியங்களின் கட்டுப்பாட்டில் 3,800க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

'தேவாங்கனம் சாருஹரிதம்' திட்டத்தின் கீழ், கோவில் நிலங்களில் மரங்கள் வளர்த்து பசுமை வளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோவில் வளாகங்களுக்குள் பூக்கள் மற்றும் பழங்கள் தரும் மரங்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பராமரிப்பு இன்றி இருக்கும் கோவில் குளங்களை கண்டறிந்து பட்டியல் அனுப்பும்படி, அனைத்து தேவசம் வாரிய உதவி கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கோவில் குளங்களை சீரமைத்து, நீர்நிலைகளாக பராமரிக்கவும் திட்டம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

08-ஜூன்-202304:24:41 IST Report Abuse
குஞ்சன்விளை ரவி பசுமை வளத்துக்கு காட்டை அழிப்பதை மரங்களை வெட்டுவதை தவிர்த்தாலேபசுமை வளமாக்க விடும் நாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X