உணவு பாதுகாப்பு தரவரிசை : மூன்றாம் இடத்தில் தமிழகம்
உணவு பாதுகாப்பு தரவரிசை : மூன்றாம் இடத்தில் தமிழகம்

உணவு பாதுகாப்பு தரவரிசை : மூன்றாம் இடத்தில் தமிழகம்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
உணவு பாதுகாப்பு தொடர்பான ஐந்தாவது தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில், கேரளா, பஞ்சாபுக்கு அடுத்ததாக தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த மாவட்டங்களுக்கான பட்டியலில், கோவை முதலிடத்தில் உள்ளது.சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சார்பில், ஐந்தாவது

உணவு பாதுகாப்பு தொடர்பான ஐந்தாவது தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில், கேரளா, பஞ்சாபுக்கு அடுத்ததாக தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த மாவட்டங்களுக்கான பட்டியலில், கோவை முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சார்பில், ஐந்தாவது ஆண்டாக, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.




latest tamil news

ஐந்து அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு,

இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதன்படி, கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.


தமிழகம், மூன்றாவது இடத்தில் உள்ளது. மாவட்டங்களுக்கான தரப் பட்டியலில், 231 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 31 மாவட்டங்கள், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன.



இந்தப் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, பெரம்பலுார், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலுார் ஆகியவையும், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன.

பட்டியலை வெளியிட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:


latest tamil news

உணவுப் பழக்கம், வாழ்க்கை நடைமுறை, அந்தந்த பருவத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி

ஆகியவற்றில், நம் பாரம்பரிய முறைகளை பின்பற்றினாலேயே, உலகின் சிறந்த உணவு தரத்தை இந்தியா பெற முடியும்.


நல்ல தரமான ஊட்டச்சத்துள்ள உணவுகளே, நோய்களில் இருந்து நம்மை காக்கும். உணவு பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

08-ஜூன்-202308:08:19 IST Report Abuse
அப்புசாமி முதல் ரெண்டு எடத்திலே குசராத்தும், உ.பி யும் தானே இருக்கணும்? அவிங்க ராஜ்ஜியம் நடக்குதே. ஜி.எஸ்.டி வசூலெல்லாம் அங்கேதானே போகுது?
Rate this:
Cancel
08-ஜூன்-202304:22:02 IST Report Abuse
குஞ்சன்விளை ரவி அழுகி குப்பையில் வீசிவேண்டிய பழத்தை பாதுகாத்துபழ ஜுஸ் போட்டு விற்பதில்தமிழகம் முதலிடம்...?
Rate this:
Cancel
08-ஜூன்-202303:41:06 IST Report Abuse
V.Saminatha இந்த உணவு பாதுகாப்புக் கழகம் FCCAI எத்தனை போலி சான்றிதழ்களை வழங்கியுள்ளது-அதை வைத்து பொருட்களை மபககளிடம் ஏத்தனை நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன?அவ்வாறு ஒரு வருடத்தில் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர்?அவர்கள் ஏமாறுவதற்கு செலவழித்த தொகை எவ்வளவு?அதை முதல்ல சொல்லுங்க-அது குறைவாக இருந்தால் பயனுள்ள அரசு நஅறுவனம்-இல்லையேல் அந்தத்.தரவரிசையையும் அந்நிறுவனத்தையும் குப்பையில் தூக்கி போட வேண்டியது தான். குருடன் ஒருவனால் தான் பொருளை கண்ணால் பார்த்து வாங்க முடியாது-திருடனுக்கு துணைபோக காவல்காரன் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X