திருவந்திபுரம் கோவிலில் பாலாலயம்
திருவந்திபுரம் கோவிலில் பாலாலயம்

திருவந்திபுரம் கோவிலில் பாலாலயம்

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
கடலுார், : கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்குவதை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடந்தது.கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபி ஷேகம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்து, ராஜகோபுரம், நடு கோபுரம்,
 Balalayam in Thiruvanthipuram temple   திருவந்திபுரம் கோவிலில் பாலாலயம்



கடலுார், : கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்குவதை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடந்தது.

கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவில் கும்பாபி ஷேகம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்து, ராஜகோபுரம், நடு கோபுரம், விமானம் மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதையொட்டி, கடந்த 5ம் தேதி பாலாலயம் பூஜைகள் துவங்கியது. கடந்த 6ம் தேதி காலை இரண்டாம் கால பூஜைகள், மாலை மூன்றாம் கால பூஜைகள் நடந்தது.

நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு மற்றும் பாலாலயம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X