கண்மாய் கரையில் குப்பை  கொட்டினால் அபராதம் -கூடலுார் நகராட்சி எச்சரிக்கை
கண்மாய் கரையில் குப்பை கொட்டினால் அபராதம் -கூடலுார் நகராட்சி எச்சரிக்கை

கண்மாய் கரையில் குப்பை கொட்டினால் அபராதம் -கூடலுார் நகராட்சி எச்சரிக்கை

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
கூடலுார்-கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இக் கண்மாயின் கரைப் பகுதியில் பாலிதீன் கழிவுகளுடன் கூடிய குப்பை அதிகமாக கொட்டப்படுகிறது. நகராட்சி சார்பில் அவ்வப்போது இது
Fine for dumping garbage on Kanmai bank - Kudalur municipality warning   கண்மாய் கரையில் குப்பை  கொட்டினால் அபராதம் -கூடலுார் நகராட்சி எச்சரிக்கை



கூடலுார்-கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இக் கண்மாயின் கரைப் பகுதியில் பாலிதீன் கழிவுகளுடன் கூடிய குப்பை அதிகமாக கொட்டப்படுகிறது. நகராட்சி சார்பில் அவ்வப்போது இது அகற்றப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மீண்டும் குப்பை அதிகரித்து ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தினந்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை வாங்குவதற்காக வாகனங்கள் அனைத்து தெருக்களிலும் வருகின்றன. இந்நிலையில் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் கண்மாய் கரையில் குப்பை கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X