பெருங்குடி - புதுச்சேரி - கடலூர் புதிய ரயில் பாதைக்கு விரைவில் 'சர்வே'
பெருங்குடி - புதுச்சேரி - கடலூர் புதிய ரயில் பாதைக்கு விரைவில் 'சர்வே'

பெருங்குடி - புதுச்சேரி - கடலூர் புதிய ரயில் பாதைக்கு விரைவில் 'சர்வே'

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னை மேம்பால ரயில் நிலையமான பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க, 'சர்வே' பணி விரைவில் துவங்க உள்ளது.சென்னையில் இருந்து கடலோரம் வழியாக ரயில் பாதை அமைத்தால், புதிய போக்குவரத்து வசதி கிடைக்கும்; பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என ரயில்வே கருதுகிறது.அதன்படி, சென்னை - மாமல்லபுரம் -

சென்னை: சென்னை மேம்பால ரயில் நிலையமான பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க, 'சர்வே' பணி விரைவில் துவங்க உள்ளது.
சென்னையில் இருந்து கடலோரம் வழியாக ரயில் பாதை அமைத்தால், புதிய போக்குவரத்து வசதி கிடைக்கும்; பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என ரயில்வே கருதுகிறது.
அதன்படி, சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்துக்கு புதிய பாதை அமைக்க, 2007ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது.



latest tamil news




ரூ.1,500 கோடி



பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், இந்த திட்டப் பணியின் மதிப்பீடு, 1,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்து, சென்னை மேம்பால ரயில் பாதை ரயில் நிலையம் உள்ள பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு புதிய ரயில் பாதை அமைக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை பெருங்குடியில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையின் வலது பக்கமாகவே, இந்த ரயில் பாதை அமையும். இதேபோல், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு இணைப்பு ரயில் பாதை அமைக்கப்படும்.
பயணியர் ரயில்கள் பெருங்குடி வழியாகவும், சரக்கு ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவும் இயக்கப்படும். பெருங்குடி அருகே மற்றொரு ரயில் நிலையமும் அமைக்கப்படும்.


ஆய்வு அறிக்கை



இந்த திட்டத்திற்கான, முதல் கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி முடியும் நிலையில் உள்ளது.

மூன்று மாதங்களில் ஆய்வு முடிந்து, ரயில்வேயிடம் அறிக்கை சமர்பிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த, 1,500 கோடி ரூபாய் செலவாகும்.
திட்டத்திற்கான வழித்தட அமைப்பு, தேவையான இடங்கள், ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் ஆய்வு அறிக்கையில் இடம்பெறும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின், படிப்படியாக திட்டத்தை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-ஜூன்-202315:05:30 IST Report Abuse
Vijay D Ratnam கேக்குறவன் கேனப்பயன்னா சொம்மா அள்ளிவிடுவாய்ங்க.
Rate this:
Cancel
RAAJ68 -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202312:47:42 IST Report Abuse
RAAJ68 நண்பர் கூறுவதும் சரிதான் வேண்டுமென்றே அரசியல்வாதிகள் தடை ஏற்படுத்தினார்கள். இப்ப மூன்று மாதங்களாக மெட்ரோ ரயில் காரர்கள் மொத்த சாலையையும் அடைத்து விட்டார்கள். மவுண்ட் மற்றும் கோயம்பேடு செல்லும் எல்லா பேருந்துகளும் நங்கநல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. நந்தனல்லூர் சாலைகளில் வண்டி ஓட்டுவது சவாலான விஷயம். சாலைகள் குறுகலாக உள்ளன. சேதமடைந்த சாலைகள் சீர் செய்யப்படவில்லை. மெட்ரோ ரயில் வேலைகளை முடிக்க எவ்வளவு காலம் ஆகுமோ, பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து மடிப்பாக்கம் கூட்ரோடு மற்றும் கீழ்கட்டளை செல்ல வேண்டுமானால் ஆட்டோக்காரர்கள் தாறுமாறாக வசூல் செய்கிறார்கள். பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து மடிப்பாக்கம் செல்ல வேண்டுமானால் ராணுவம் பேட்டை சந்திப்புக்கு முன்பே 100 அடி சாலையில் இடதுபுறம் திரும்பி புழுதிவாக்கம் வழியாக தட்டு தடுமாறி செல்ல வேண்டும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம் சாலைகள் அவ்வளவு மோசமாக உள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகம் சரியான முறையில் திட்டமிடாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் தகுதி. மெட்ரோ ரயில் வேலை செய்யும் இடங்களின் அருகாமையில் சிறிய சிறிய பாதையை ஏற்படுத்தி ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு உண்டாக்கியுள்ளனர் ஆனால் அந்தப் பாதை கரடு முரடாக உள்ளன சறுக்கி விழுந்தால் மோட்சம் நிச்சயம்.
Rate this:
Cancel
Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா
08-ஜூன்-202311:42:26 IST Report Abuse
Jayaraman Ramaswamy உங்க ஏரியா மந்திரி யாராவது இருந்தால் வேலை நடக்கும். இல்லை என்றால் எதுவும் நடக்காது. அந்த இடத்தில இருந்த ஏரி காணாமல் போய் விட்டது. எத்தனை பேருக்கு தெரியும். எறியும் போச்சு ரோடும் போச்சு. ரயிலும் வரவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X