புதுடில்லி: ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2024 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.
மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
▪ சர்வதேச பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது.
▪ ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது. 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது.
▪ பணவீக்கம் உயர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
▪ மொத்த பணவீக்கம் உயர்வு 4 சதவீதமாக நீடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் இப்படியே இருக்கும் என கணித்துள்ளோம்
▪ உலக அரசியல் நிலவரம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.
▪ உள்நாட்டு தேவை நிலை, வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது.
▪ அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
▪ இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2ம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும். 2024ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.