வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது என இன்று(ஜூன் 08) இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அதிக மழை பொழிவாக, தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவழை ஆண்டுதோறும் பரவலாக பெய்யும்.
குறிப்பாக கேரளாவில் தான் தென்மேற்கு பருவழை முதல் முதலாக துவங்கும். இதனை தொடர்ந்து, கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கும்.
வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல்வாரத்தில் துவங்கி கொட்டி தீர்க்கும். அதன் படி, இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் ஜூன் 1ம் தேதி அல்லது 4ம் தேதி துவங்கும் கணிக்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை ஜூன் 4ல் துவங்கவில்லை.
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது என இன்று(ஜூன் 08) இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென் மேற்கு பருவமழை துவங்கியது. ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக துவங்கி உள்ளது.
தமிழகத்திலும் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வெளுத்து வாங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.