பல்கலை பட்டம் கிடைக்காமல் 9 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு: பொன்முடி
பல்கலை பட்டம் கிடைக்காமல் 9 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு: பொன்முடி

பல்கலை பட்டம் கிடைக்காமல் 9 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு: பொன்முடி

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில், கவர்னர் தாமதம் செய்வதால், பல்கலை பட்டம் கிடைக்காமல் 9.29 லட்சம் மாணவர்கள் காத்திருக்கின்றனர், என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜூலை 2ல் பொறியியல் கவுன்சிலிங் துவங்க உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக
9 lakh students suffer from not getting university degree: Ponmudi  பல்கலை பட்டம் கிடைக்காமல் 9 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு: பொன்முடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில், கவர்னர் தாமதம் செய்வதால், பல்கலை பட்டம் கிடைக்காமல் 9.29 லட்சம் மாணவர்கள் காத்திருக்கின்றனர், என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.


சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜூலை 2ல் பொறியியல் கவுன்சிலிங் துவங்க உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 18,600 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.


கவர்னரின் நடவடிக்கையால் பல்கலைகழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதம் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்திலும் தாமதம் ஏற்பட கவர்னரே காரணம். பட்டமளிப்பு விழா குறித்து தமிழக அரசிடமும் கவர்னர் கேட்பது கிடையாது.


வட இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர விரும்புகிறார். மத்திய அமைச்சர்களை அழைத்து வர நினைக்கிறார். அவர்களின் தேதி கிடைப்பதில் தாமதம் ஆவதால், பட்டமளிப்பு விழா தாமதம் ஆகிறது. இதற்கு கவர்னர் தான் பதில் சொல்ல வேண்டும். 9.29 லட்சம் மாணவர்கள், பட்டம் கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.


அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைகழகங்களில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. இவ்வாறு பொன்முடி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

rama adhavan - chennai,இந்தியா
08-ஜூன்-202319:14:45 IST Report Abuse
rama adhavan Degree certificate is not mandatory. It is only decorative. It can be got in absentia also. Only provisional certificate and mark lists and TC are mandatory. So Minister's accusation in this regard against Governor is malicious.
Rate this:
Raja - ,
08-ஜூன்-202320:48:54 IST Report Abuse
RajaTo get that provisional certificate also students needs to pay bribe to the university staffs. All degree holders knows that degree certificate is not mandatory for further employment or studies. They can submit the degree certificate even after one year. I am employed and I did the same. But, it is pathetic that our higher education minister dont know about the provisional certificate 😂...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-ஜூன்-202319:08:06 IST Report Abuse
duruvasar ஆளுநர் மிகவும் இனிபானவர் என்பது அமைச்சரின் பேச்சிலிருந்து தெரிகிறது.
Rate this:
Cancel
08-ஜூன்-202318:59:03 IST Report Abuse
ஆரூர் ரங் நம்பும்படியாக இல்லை. முதல்வரே வேந்தராக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் எனும் ஆசையில் ஒருவேளை துணைவேந்தர்கள் காத்திருக்கலாம்..அந்த சட்டத்தில் ஆளுநர் ரவி கையெழுத்திட வாய்ப்பேயில்லை ராசா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X