தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்: எதிர்க்கட்சிகளுக்கு சரத்பவார் அறிவுரை
தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்: எதிர்க்கட்சிகளுக்கு சரத்பவார் அறிவுரை

தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்: எதிர்க்கட்சிகளுக்கு சரத்பவார் அறிவுரை

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
மும்பை: 'ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். லோக்சபாவுக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் களம்
Need to work together on national issues: Sharad Pawar advises opposition parties  தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்: எதிர்க்கட்சிகளுக்கு சரத்பவார் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: 'ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.


லோக்சபாவுக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் களம் இறங்கியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது. திடீரென கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.



இது குறித்து, சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வர் நிதிஷ்குமார் ஜூன் 23ம் தேதி கூட்டத்திற்கு பங்கேற்க, எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இது குறித்து சரத்பவார் கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக, சிலர் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். இதில் அரசியல் தேவையில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும் போது, உண்மை அனைவருக்கும் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

Kanakala Subbudu - Chennai,இந்தியா
09-ஜூன்-202305:45:46 IST Report Abuse
Kanakala Subbudu இவரெல்லாம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே நல்லது. அலுவலகங்களில் எப்படி வயது வரம்பு இருக்கிறதோ அப்படி அரசியலுக்கும் தேவை. சிலர் 90 வயதானாலும் விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜூன்-202320:34:29 IST Report Abuse
M  Ramachandran நாட்டு நலன் யார் இதை பற்றி பேராசுவது மும்பையை கூற முகம் இன்னும் மனதில் நிழலாடி கொண்டிருக்கிறது காரணகர்த்தா பாகிஸ்தான் அதற்கு உதவியாக செயல் பட்ட மும்பை நிழல் உலக தாதா கும்பல் சிபிஐ கைது நடவடிக்கியய் நீர்த்து போக செய்த காரண கர்த்தா. மும்பையை போலீஸு டில்லியில் CBI ட்டைரக்டரையே கைது செய்த நிகழ்வு பலருக்கு தெரிய நியாமில்லை. அப்போதைய ஊடகங்களில் வந்த செய்தி
Rate this:
Cancel
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-202317:13:49 IST Report Abuse
Bye Pass தேசியநலனுக்கு பாடுபட கிடைத்த தலைவர்கள் மிகவும் எழுச்சியுடன் பாடுபட துடிப்பாக இருக்காங்க
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
09-ஜூன்-202306:40:26 IST Report Abuse
vadiveluநடை பயணத்தை இந்த இளைஞர்கள் தொடங்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X