தேனி: போடி பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்தவர் 47 வயது பெண் கூலித்தொழிலாளி. இவருக்கு 8 வயது, 6 வயதில் மகள்கள் உள்ளனர். 2019 ஜூலை 29ல் அவர்களை வீட்டில் விட்டு விட்டு போடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் திரும்பியபோது மகள்களை காணவில்லை. தேடியபோது 2 சிறுமிகளும் அப்பகுதியில் அய்யப்பன் வீட்டில் அழுது கொண்டு இருந்தனர். விசாரித்ததில் அவர்களை அய்யப்பன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியது தெரியவந்தது. தேனி அனைத்து மகளிர் போலீசார் அவரை 'போக்சோ'வில் கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கோபிநாதன், குற்றவாளி அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார்.