பெரம்பலூரில் ரவுடி வெட்டி கொலை : 6 பேர் கைது
பெரம்பலூரில் ரவுடி வெட்டி கொலை : 6 பேர் கைது

பெரம்பலூரில் ரவுடி வெட்டி கொலை : 6 பேர் கைது

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
பெரம்பலுார்: பெரம்பலுாரில், ரவுடியை வெட்டி கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 39, ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5ம் தேதி பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில் தனது
Rowdy hacked to death in Perambalur: 6 arrested  பெரம்பலூரில் ரவுடி வெட்டி கொலை : 6 பேர் கைது

பெரம்பலுார்: பெரம்பலுாரில், ரவுடியை வெட்டி கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 39, ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5ம் தேதி பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

கொலை தொடர்பாக பெரம்பலுார் எளம்பலுார் ரோடு பகுதியைச் சேர்ந்த அபினாஷ், 22, செஞ்சேரி நவீன்,19, ஆலம்பாடி துறையூர் வடமலை நவீன், 20, திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெரு பிரேம் ஆனந்த், 45, இவரது மனைவி ரமணி, 34, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்ட பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202309:37:21 IST Report Abuse
Mani . V பின்ன, ரௌடிகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். அவர்களை கொலை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கத்தான் வேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜூன்-202320:23:38 IST Report Abuse
M  Ramachandran தமிழகம் அமைதி பூங்கா நம்புங்கள் விடியல் தலிய்யவர் சொல்கிறார் காதில் பூ சூத்து கிறார். கேளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X