பெரம்பலுார்: அரியலுார் அருகே, 15 வயது சிறுமியை பெங்களூருக்கு திருமணம் செய்து கொள்ள அழைத்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள் பேட்டை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வினோத், 23, கட்டிட தொழிலாளி. இவர், தற்போது பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய வினோத் பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த சிறுமி பெங்களூர் புறப்பட்டு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் எஸ்.ஐ. தனச்செல்வன் தலைமையான போலீசார் சிறுமியை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.