ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 55 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 55 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 55 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
செஹோர்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை, 55 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சடலமாக நேற்று மீட்கப்பட்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் குஷ்வாஹாலி - ராணி தம்பதியின் மகள் சிருஷ்டி. இரண்டரை வயதான இந்த குழந்தை, கடந்த 6ம் தேதி வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில்
Rescue of unconscious child who fell into borehole in MP  ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 55 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

செஹோர்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை, 55 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சடலமாக நேற்று மீட்கப்பட்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் குஷ்வாஹாலி - ராணி தம்பதியின் மகள் சிருஷ்டி. இரண்டரை வயதான இந்த குழந்தை, கடந்த 6ம் தேதி வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் விளையாடிய போது, மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், குழந்தையை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.


குழந்தையை உயிருடன் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க, அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டதை அடுத்து, இதற்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி இரவு, பகலாக நடந்தது. முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை, இயந்திரங்களின் அதிர்வால் வழுக்கி, 100 அடி துாரத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.


latest tamil news

குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், 'ரோபோடிக்ஸ்' நிபுணர்களின் உதவியுடன், மீட்பு பணி மூன்றாவது நாளான நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 55 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. டாக்டர்களும் இதை உறுதி செய்தனர். மூன்று நாட்களாக நடந்த முயற்சி பலனளிக்காமல் குழந்தை இறந்தது, முகவாலி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு உள்ள நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

09-ஜூன்-202314:32:10 IST Report Abuse
aaruthirumalai வெட்கப்பட வேண்டிய வேதனையான நிகழ்வு
Rate this:
Cancel
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202314:31:05 IST Report Abuse
Subramanian சோகமான நிகழ்வு. ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
09-ஜூன்-202306:44:35 IST Report Abuse
RaajaRaja Cholan போர் கம்பெனிகளுக்கு ஒரு சட்டம் கொண்டு வர முடியாத, போர் போட்டவுடன், கடைசி குழாய் ஒரு அரிப்பு தடுப்புடன் இருக்க வேண்டும், பம்ப் மட்டும் வரை அந்த அரிப்பு தடுப்பு அல்லது முடியை அகற்ற கூடாது என்று, அதை அகற்ற முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் இருக்கவேண்டும் என்று சட்டம் போட முடியாதா, இன்னும் எத்தனை உயிர்கள் இதன் மூலம் முடிய வேண்டும் . சட்டம் இயற்றி போர் கொம்பனிகளை நடைமுறை செய்ய சொல்ல வேண்டுமா இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X