கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் லாச்சென், லாச்சுங் உட்பட, 10.000 அடி உயரத்துக்கு மேல் அமைந்துள்ள, சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லும், சுற்றுலா பயணியர் சுவாசப் பிரச்னைகளை, எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்தன.
இதை தடுக்க, சிக்கிம் மாநிலத்தில் பதிவு செய்யப்படும், அனைத்து தனிநபர் மற்றும் வணிக ரீதியிலான வாகனங்களில்,அடுத்த மாதம்,1ம் தேதி முதல், கையடக்க ஆக்சிஜன் உபகரணங்கள் எடுத்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உபகரணங்களுக்கு, மாநில சுகாதாரத்துறை சான்றிதழ் வழங்கப்படும் என, அம்மாநில போக்குவரத்து துறை செயலர், ராஜ் யாதவ் தெரிவித்துள்ளார்.
போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள், இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என, சோதனை நடத்துவர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.