மதுரமங்கலத்தில் ரூ.54 லட்சத்தில் தேர் அமைக்கும் பணி துவக்கம்
மதுரமங்கலத்தில் ரூ.54 லட்சத்தில் தேர் அமைக்கும் பணி துவக்கம்

மதுரமங்கலத்தில் ரூ.54 லட்சத்தில் தேர் அமைக்கும் பணி துவக்கம்

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:எம்பார் 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழாவை முன்னிட்டு, மதுரமங்கலத்தில் 54 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மதுரமங்கலம் கிராமத்தில் வைணவ மகான் எம்பார் சுவாமிகளின் அவதார தலமான வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.இங்கு எம்பார் அவதரித்த 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழா 2026ம் ஆண்டு
 Construction of Chariot in Maduramangalam at Rs.54 Lakhs started   மதுரமங்கலத்தில் ரூ.54 லட்சத்தில் தேர் அமைக்கும் பணி துவக்கம்

ஸ்ரீபெரும்புதுார்:எம்பார் 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழாவை முன்னிட்டு, மதுரமங்கலத்தில் 54 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மதுரமங்கலம் கிராமத்தில் வைணவ மகான் எம்பார் சுவாமிகளின் அவதார தலமான வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு எம்பார் அவதரித்த 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழா 2026ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நன்கொடையாளர்கள் வாயிலாக 54 லட்சம் ரூபாய் மதிப்பில் 31 அடி உயரத்தில் தேர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

மதுரமங்கலம் எம்பார் கோவில் அருகே வேங்கை மரத்தில் தேர் அமைக்கும் முதல் கட்ட பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X