வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் , பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், இன்று (08 ம் தேதி) பிரதமர் மோடியுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது இரு நாடுகளிடயே பரஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்த இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
![]()
|
மேலும் சமீபத்தில் சூடான் உள்நாட்டு போரின் போது, அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு வர சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையம் பயன்படுத்த உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.