'ஜஸ்ட் பாஸ்..ஆனாலும் ஸ்வீட் எடு கொண்டாடு' : சமூக வலைதளத்தில் இன்று..!
'ஜஸ்ட் பாஸ்..ஆனாலும் ஸ்வீட் எடு கொண்டாடு' : சமூக வலைதளத்தில் இன்று..!

'ஜஸ்ட் பாஸ்..ஆனாலும் ஸ்வீட் எடு கொண்டாடு' : சமூக வலைதளத்தில் இன்று..!

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
10ம் வகுப்பு தேர்வில், 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவரை, அவரது பெற்றோர்கள் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவை சேர்ந்த மாணவர், சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மொத்தம் 44.7 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி
Just pass..but take sweet and celebrate: Today on social media..!  'ஜஸ்ட் பாஸ்..ஆனாலும் ஸ்வீட் எடு கொண்டாடு' : சமூக வலைதளத்தில் இன்று..!

10ம் வகுப்பு தேர்வில், 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவரை, அவரது

பெற்றோர்கள் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவை சேர்ந்த மாணவர், சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மொத்தம் 44.7 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெறுவேன் என எதிர்ப்பார்க்கவில்லை என மாணவர் கூறியுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது பெருமையளிப்பதாக அவரது பெற்றோர்கள், மொபைல் போனில் 35 என்ற எண்ணை காட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.

இதனை ஐ..ஏ.எஸ் அதிகாரி அவனீஷ் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் 'மும்பையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.ஆனால் சோகமாகவோ கோபமாகவோ இல்லாமல் அவனது வெற்றியை பெற்றோர் கொண்டாடினார்கள்.' என பகிர்ந்திருந்தார். சுமார் 3.26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வீடியோ வைரலானது.


latest tamil news


பொதுவாக தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தோரை தூக்கி கொண்டாடும் பெற்றோர்கள் மத்தியில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த மாணவரை நேர்மறையான மனநிலையுடன் கொண்டாடும் பெற்றோரை ஏராளமானோர் வாழ்த்தினர்.

மற்றொரு நெட்டிசனோ,'இது பற்றி சமூகவலைதளத்தில் பேசுவது நன்றாக இருக்கும்.
ஆனால் உண்மை என்னவென்று உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.
மதிப்பெண் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்காது. என்கிறவர்கள். முதலில்
பார்ப்பது மதிப்பெண்ணை தான். அந்த பையனுக்கு இப்போதைக்கு இது தெரிய
வாய்ப்பில்லை. 6 - 7 ஆண்டுகளுக்கு பிறகு இது சரியா, தவறா என தெரியும்'
என பதிவிட்டிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
10-ஜூன்-202300:33:33 IST Report Abuse
தாமரை மலர்கிறது மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது. ஆனால் இது போன்ற கொண்டாட்டங்களுக்காக, சில நல்ல மாணவர்கள் வேண்டுமென்றே முப்பைத்தந்து மதிப்பெண்கள் எடுக்க முற்படுவார்கள். அதனால் இதுபோன்றே செயல்கள் மற்றவர்களை ஊக்குவிக்கும். குழந்தைகளுக்கு முன், மதுவை கொண்டாடுவது, குறைவான மதிப்பெண்ன்னை கொண்டாடுவது, சிகரெட்டை ஸ்டைல் என்று போற்றுவது போன்ற செயல்கள் மற்றவர்களை தவறான போக்கிற்கு ஊக்குவிக்கும்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
09-ஜூன்-202323:56:44 IST Report Abuse
Siva தமிழ்நாடு கல்வியில் எப்படி பாஸ் ஆனாலும் பிரயோஜனம் இல்லை.. ஆக உங்கள் சொந்த புத்தியால் வியாபாரம் செய்யுங்கள். நேர்மையாக செய்யுங்கள். வாழ்வில் மகத்தான இடம் உண்டு.. இது தமிழகத்தில் வாழும் இளைஞர்கள் மீது உள்ள பற்றால் இந்த பதிவு.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜூன்-202318:45:42 IST Report Abuse
D.Ambujavalli நான் ஆறாம் வகுப்புவரை ஆவரேஜ் மாணவியாகத்தான் இருந்தேன் கணக்கு என்றால் ஒரே அழுகை எட்டாம் வகுப்பில் ஆசிரிய மிஸ். சவரிமுத்து அவர்களின் போதிக்கும் திறமையும், ஊக்கமான பேச்சுகளும் மிக உற்சாகப்படுத்தும் இறுதியில் பள்ளியில் இரண்டாவது மாணவி கணக்கில் தொண்ணூற்றிரண்டு மதிப்பெண் எனவே அந்தப் பையன் மனம் தவறாமல் ஊக்குவிக்கும் பெற்ரோரைப் பாராட்டுவோம்
Rate this:
10-ஜூன்-202302:23:40 IST Report Abuse
Tharuvai Muralikrishnanexcellent...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X