மணிப்பூரில் வன்முறை : 6 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு
மணிப்பூரில் வன்முறை : 6 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு

மணிப்பூரில் வன்முறை : 6 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இன்று 6 எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த மாதம் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தால்
Violence in Manipur: 6 FIRs registered  மணிப்பூரில் வன்முறை : 6 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இன்று 6 எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த மாதம் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து மாநிலத்தைவிட்டு வெளியேறினர்.


latest tamil news

'மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதி திட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, அம்மாநில அரசு தரப்பில், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற மத்திய அரசு, சி.பி.ஐ., அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. விசாரணையை துவக்கியுள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், இது குறித்து ஆறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 101 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Narayanan Muthu - chennai,இந்தியா
09-ஜூன்-202321:34:12 IST Report Abuse
Narayanan Muthu கடந்த ஆறு வாரமாக பற்றி எரிகிறது. இன்னமும் விசாரணையில்தான் இருக்கிறது அரசு. பத்திரிகைகள் கூட செய்தி வெளியிட யாருக்கோ பயந்து அடக்கி வாசிக்கிறது
Rate this:
Cancel
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா
09-ஜூன்-202321:19:47 IST Report Abuse
திகழ்ஓவியன் DOUBLE என்ஜின் சர்க்கார் என்று சொல்லி வோட்டு வாங்கி நாறி கொண்டு இருக்கு
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
09-ஜூன்-202322:07:12 IST Report Abuse
Priyan Vadanadகனடாவில் இருந்துகொண்டு எங்கள் நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். எங்கள் சித்தாந்தங்களை செயல்படுத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம். என்னதான் நீங்கள் மூக்கை சிந்தி எங்கள்மேல் வீசினாலும் நாங்கள் செய்வதை செய்துகொண்டுதான் இருப்போம். எவரும் தடுக்க முடியாது. ஏன், தடுக்கவே கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X