'புல்லட்' ரயில் திட்டம்: கடலுக்கு அடியில் 7 கி.மீ., சுரங்கம் அமைகிறது
'புல்லட்' ரயில் திட்டம்: கடலுக்கு அடியில் 7 கி.மீ., சுரங்கம் அமைகிறது

'புல்லட்' ரயில் திட்டம்: கடலுக்கு அடியில் 7 கி.மீ., சுரங்கம் அமைகிறது

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
மும்பை : ஆமதாபாத் - மும்பை இடையிலான, 'புல்லட்' ரயில் திட்டத்துக்காக, கடலுக்கு அடியில் 7 கி.மீ., துாரத்துக்கு நாட்டின் முதல் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரையிலான 508 கி.மீ., துாரத்துக்கு, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணியை தேசிய அதிவிரைவு ரயில் கழகம் முழுவீச்சில்
The tunnel is located 7 km under the sea  'புல்லட்' ரயில் திட்டம்: கடலுக்கு அடியில் 7 கி.மீ., சுரங்கம் அமைகிறது

மும்பை : ஆமதாபாத் - மும்பை இடையிலான, 'புல்லட்' ரயில் திட்டத்துக்காக, கடலுக்கு அடியில் 7 கி.மீ., துாரத்துக்கு நாட்டின் முதல் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம்

கையெழுத்தானது.


மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரையிலான 508 கி.மீ., துாரத்துக்கு, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணியை தேசிய அதிவிரைவு ரயில் கழகம் முழுவீச்சில் செய்து வருகிறது. இதற்காக, மஹாராஷ்டிராவில், 156 கி.மீ.,யும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பகுதியில் 4 கி.மீ.,யும், குஜராத்தில் 384 கி.மீ., துாரத்துக்கும் ரயில் பாதை அமைய உள்ளது.


latest tamil news


இந்த புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் திறன் உடையது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், ஆமதாபாத் - மும்பை இடையிலான பயண நேரம், 2 மணி நேரம், 58 நிமிடங்களாக குறையும்.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, மஹாராஷ்டிராவின் ஷில்பட்டா என்ற இடம் வரை பிரமாண்ட துாண்கள் மீது பயணிக்க உள்ள இந்த புல்லட் ரயில், ஷில்பட்டாவில் இருந்து கடைசி நிறுத்தமான, மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் நிறுத்தம் வரை, பூமிக்கு அடியில் பயணிக்கிறது.

இதற்காக, பூமிக்கு கீழே 82 அடி முதல், 213 அடி ஆழத்தில் 21 கி.மீ., துாரத்துக்கு இருவழி ரயில் பாதையுடன் கூடிய சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.இதில், தானே மாவட்டத்தில், கடலுக்கு அடியில் 7 கி.மீ., துாரத்துக்கு சுரங்கம் அமைகிறது. நம் நாட்டில், கடலுக்கு அடியில் ரயில்வே
சுரங்கம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

10-ஜூன்-202314:33:23 IST Report Abuse
அப்புசாமி எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202312:40:44 IST Report Abuse
Mani . V கங்கை ஆற்றுப் பாலம் (ஆயிரத்து நானூத்து சொச்சம் கோடியப்பு) அப்படியே விழும் அளவுக்கு பலமா கட்டியது மாதிரி இந்த சுரங்கப் பாதைக்குள் கடல் தண்ணீர் புகுவது மாதிரி கட்டாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
10-ஜூன்-202306:15:23 IST Report Abuse
இறைவி சென்னையில் உட்கார்ந்து கொண்டு வரும் 200 ரூபாய் உபிக்கள் Toranto, California, Newyork என்றெல்லாம் அலறி அடித்து கொண்டு கருத்து போடுகிறார்களே? வாங்கும் கூலிக்கு வஞ்சனை இல்லாத உழைப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X