'இணையதள குற்றங்களில் இருந்து  மக்களை காப்பது அரசின் பொறுப்பு'
'இணையதள குற்றங்களில் இருந்து மக்களை காப்பது அரசின் பொறுப்பு'

'இணையதள குற்றங்களில் இருந்து மக்களை காப்பது அரசின் பொறுப்பு'

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : ''இணையதளங்களை பயன்படுத்தும் நம், 'டிஜிட்டல் குடிமக்கள்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ஒழுங்கு விதிமுறைகளை வகுக்கும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நம் நாடு அடைந்துள்ள
Governments responsibility to protect people from cybercrime  'இணையதள குற்றங்களில் இருந்து  மக்களை காப்பது அரசின் பொறுப்பு'

புதுடில்லி : ''இணையதளங்களை பயன்படுத்தும் நம், 'டிஜிட்டல் குடிமக்கள்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ஒழுங்கு விதிமுறைகளை வகுக்கும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.



பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சியை எடுத்துரைக்கும் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டில், 85 கோடி மக்கள் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 2025ல் இந்த எண்ணிக்கை 120 கோடியை தொடும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இணையதளம் வாயிலாக நடக்கும் குற்றங்களின்எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. ஒருவரை குறித்து அடையாளம் தெரியும் வகையில், அவரது அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள், 'வீடியோ'க்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி தவறான நோக்கத்துடன் பகிர்வது அதிகரித்து வருகிறது.


latest tamil news


டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பரவலாகி வரும் நிலையில், இவற்றால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ஒழுங்குமுறைகளை வகுக்கும். சட்டம் - ஒழுங்கு விவகாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதை ஒடுக்க, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்ற வேண்டும்.
'டிஜிட்டல் இந்தியா' மசோதா குறித்து, துறை வல்லுனர்களின் கருத்துக்களை அறியும் பணி இந்த மாதம் துவங்க உள்ளது. தனிமனித தகவல் பாதுகாப்பு மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

10-ஜூன்-202314:29:28 IST Report Abuse
அப்புசாமி பிரதமர் ஆபீசின் பேரிலேயே புகுந்து கொள்ளையடிக்கிறாங்கோ... கேட்டால், இது தேசிய பச்துகாப்பு விவகாரம், என்.ஐ.ஏ லேருந்து வரும். எஃப்.பி.ஐ லேருந்து வர்ரோம்னு மிரட்டல் வேற. எவன் அசல், எவன் நகல்னு தெரிய மாட்டேங்குது. 50 லட்சம் அக்கவுண்டல போட்டாஒரு பய கேள்வி கேக்க மாட்டார்
Rate this:
Cancel
10-ஜூன்-202314:24:13 IST Report Abuse
அப்புசாமி டிஜிட்டல்.புரட்சி... இன்னும் AI, அதான் செயற்கை நுண்ணறிவுப்.புரட்சி இன்னும் இந்தியாவுக்கு வரவே இல்லை.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
10-ஜூன்-202308:01:26 IST Report Abuse
Balasubramanian சமீபத்தில் இது எனக்கு நடந்தது சென்ற Christmas முந்தைய தினம் எனது மொபைலில் வரிசையாக 15 SMS அதுவும் இரவு மணி 12 முதல் இரண்டு வரை. பார்த்தால் யாரோ அமெரிக்காவில் பாரில் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அதற்கான பில் ஒவ்வொன்றாக, எனது கிரெடிட் கார்டில்பதறிப் போய் விட்டேன். இதை ஒப்புக் கொள்ள இதை அழுத்தவும். மறுக்க இந்த தொலைபேசிக்கு போன் செய்யவும் என்று SMS வேறு அடுத்த 4 மாதம் இரவு பகல் தூக்கம் இல்லை. குறிப்பிட்ட வங்கிக்கு Mail எழுதி அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, அந்த செலவினங்களை திரும்ப பெற்று, மாற்று கார்டு வாங்க படாத பாடு பட்டேன் இதுவே எழுத படிக்க தெரியாத பாமரர்கள் மற்றும் மிக வயோதிகர்கள் கதி? நிச்சயம் இதற்கு உடனடி தீர்வு தேவை. முதலில் கார்டு மற்றும் மொபைலில் பணம் பரிவர்த்தனை செய்ய Limit Set செய்ய அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X