'பைக் டாக்சி'களுக்கு தடை:  மத்திய அரசுக்கு நோட்டீஸ்
'பைக் டாக்சி'களுக்கு தடை: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

'பைக் டாக்சி'களுக்கு தடை: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,-பைக் டாக்சி மீதான தடையை நீக்கி, புதுடில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி அரசு தாக்கல் செய்த மனு மீது, மத்திய அரசு பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.ரேபிடோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள், பைக் டாக்சி சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் சேவைக்கு தடை விதித்து, கடந்த பிப்ரவரியில் ஆம் ஆத்மியைச்
 Notice to central government to ban bike taxis   'பைக் டாக்சி'களுக்கு தடை:  மத்திய அரசுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



புதுடில்லி,-பைக் டாக்சி மீதான தடையை நீக்கி, புதுடில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி அரசு தாக்கல் செய்த மனு மீது, மத்திய அரசு பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

ரேபிடோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள், பைக் டாக்சி சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களின் சேவைக்கு தடை விதித்து, கடந்த பிப்ரவரியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதுடில்லி அரசு உத்தரவிட்டது.

தடையை மீறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, ரேபிடோ நிறுவனத்திற்கு புதுடில்லி அரசு 'நோட்டீஸ்' அனுப்பியது.

இதை எதிர்த்து, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில், ரேபிடோ சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுடில்லி அரசின் தடையை நிறுத்தி வைத்ததுடன், ரேபிடோ நிறுவனத்தின் இறுதி கொள்கை வெளியாகும் வரை, பைக் டாக்சி சேவையை தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் புதுடில்லி அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் ராஜேஷ் பிண்டல் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த மனுக்களின் நகலை, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் பதிலை தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

10-ஜூன்-202315:42:48 IST Report Abuse
குரு தமிழ்நாட்டில் நியாயமா மீட்டர் வைக்க மாட்டாங்க அவங்க வச்சது தான் ரேட்டு. இதுல எல்லா அரசியல் கட்சியினுடைய தலையிடும் இருக்கு. சாதாரணமா மூணு கிலோ மீட்டருக்கு 250 ரூபாய் வாங்குறாங்க . இதுல ராப்பிடோ போன்ற 🛵 service பயணிக்கிறது மூலமா 100 ரூபா குள்ள வருது. இதுவும் புடிக்கல . இதுக்கும் வச்சுட்டாங்க ஆப்பு மொத்தத்துல இந்த கவர்மெண்ட் மீட்டர் வைக்காத ஆட்டோ சர்வீஸ் முறைப்படுத்தாது . ஒரு நாள் பஸ் வரும் அடுத்த நாள் பஸ் வராது மினி பஸ் வராது. ஷேர் ஆட்டோ முறை படுத்த மாட்டாங்க ஆனா கொள்ளை அடிக்கிறது மட்டும் நம்பர் ஒன் தொழிலா வச்சு இருப்பாங்க. எதுல முன்னேறிச்சோ இல்லையோ கொள்ளையடிக்கிறது
Rate this:
Cancel
எங்கே விடியல் ? - kirutinagiri,இந்தியா
10-ஜூன்-202309:54:20 IST Report Abuse
எங்கே விடியல் ? இந்த பைக் டாக்சியினால் பயனடைவது மத்திய தர வர்க்கத்தினர் மாத்திரமே , அவர்கள் பிழைப்பது கெஜ்ரிவாலுக்கும் , ஆட்டோ ட்ரைவர்களுக்கும் பிடிக்காதே
Rate this:
Cancel
10-ஜூன்-202304:58:43 IST Report Abuse
குமரி குருவி எல்லோரும் பிழைக்கட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X