மல்யுத்த சங்க தலைவர் அலுவலகத்தில் வீராங்கனையிடம் போலீஸ் விசாரணை
மல்யுத்த சங்க தலைவர் அலுவலகத்தில் வீராங்கனையிடம் போலீஸ் விசாரணை

மல்யுத்த சங்க தலைவர் அலுவலகத்தில் வீராங்கனையிடம் போலீஸ் விசாரணை

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி-இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீராங்கனையை, அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தினர்.இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், லோக்சபா பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 66, மீது, மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேல், தலைநகர்
 Police questioning the athlete at the wrestling association presidents office   மல்யுத்த சங்க தலைவர் அலுவலகத்தில் வீராங்கனையிடம் போலீஸ் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீராங்கனையை, அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், லோக்சபா பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 66, மீது, மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேல், தலைநகர் புதுடில்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மூத்தத் தலைவரும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருமான அனுராக் தாக்குருடன், சமீபத்தில், மல்யுத்த வீரர் - வீராங்கனையர் பேச்சு நடத்தினர்.

அப்போது அவர்களிடம், 'இந்த விவகாரத்தில், வரும் 15ம் தேதிக்குள் விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, அமைச்சர் தாக்குர் உறுதி அளித்தார்.

இதை ஏற்ற மல்யுத்த வீரர் - வீராங்கனையர், 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீராங்கனையை, அவரது வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு, புதுடில்லி போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர்.

அரை மணி நேரம் நடந்த விசாரணையின் போது, நடந்த சம்பவத்தை மீண்டும் செய்து காட்ட போலீசார் அறிவுறுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

duruvasar - indraprastham,இந்தியா
10-ஜூன்-202312:24:47 IST Report Abuse
duruvasar விடுதியின் சுவர்களிடம் விசாரித்தால் சிலரின் விக் கழன்றுவிடும்
Rate this:
Cancel
Kanakala Subbudu - Chennai,இந்தியா
10-ஜூன்-202310:36:14 IST Report Abuse
Kanakala Subbudu இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் எதோ ஒன்று சம்பந்தப்பட்டு இருக்கிறது..2024 தேர்தல் வரை இப்படி நிறைய Tool Kit எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202306:40:51 IST Report Abuse
Kasimani Baskaran பல வருடங்களுக்கு முன் (காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்?) நடந்தது என்றால் அதற்கு இப்பொழுது புகார் கொடுப்பது புகாரின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X