ஒரே ஒரு முறை வாய்ப்பு கேட்கிறார் அன்புமணி
ஒரே ஒரு முறை வாய்ப்பு கேட்கிறார் அன்புமணி

ஒரே ஒரு முறை வாய்ப்பு கேட்கிறார் அன்புமணி

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (28) | |
Advertisement
தஞ்சாவூர்,- ''ஒரே ஒரு முறை வாய்ப்பளித்தால் கல்வி, மருத்துவம், இடு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பா.ம.க., பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:கர்நாடகாவில் காங்., கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும், நீர்ப்பாசனத் திட்டத்தை, ஐந்து ஆண்டிற்குள் நிறைவேற்ற, 2 லட்சம் கோடி
 Anbumani asks for a chance only once   ஒரே ஒரு முறை வாய்ப்பு கேட்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்,- ''ஒரே ஒரு முறை வாய்ப்பளித்தால் கல்வி, மருத்துவம், இடு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பா.ம.க., பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

கர்நாடகாவில் காங்., கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும், நீர்ப்பாசனத் திட்டத்தை, ஐந்து ஆண்டிற்குள் நிறைவேற்ற, 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்.

தமிழகத்தில் ஆண்டிற்கு, 20 ஆயிரம் கோடி என, ஐந்து ஆண்டிற்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால், தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றி விடலாம்.

கொள்ளிடம் ஆற்றில், 11 தடுப்பணை கட்ட முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்ச வாங்கும் நிலை இருக்காது.

பா.ம.க.,விற்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கினால், கல்வி, மருத்துவம், விவசாய இடு பொருட்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (28)

Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஜூன்-202308:07:50 IST Report Abuse
Cheran Perumal தேர்தல் வாய்ப்புக்காக ஸ்டாலினின் அனைத்து அராஜகங்களையும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப்போகும் இவருக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என்று நினைப்பது ஏமாற்றத்தில்தான் முடியும்.
Rate this:
Cancel
10-ஜூன்-202322:08:36 IST Report Abuse
சி சொர்ணரதி வாய்ப்பில்லை அன்புமணி ..... உங்கள் சாதிக்காக கட்சி நடத்தும் உங்களை எப்படி தேர்ந்து எடுப்பார்கள்..
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-202321:35:35 IST Report Abuse
Matt P தன்னம்பிக்கை எல்லோருக்கும் இருக்கும். தன்னால் மட்டும் தான் முடியும் என்ற இறுமாப்பு வர கூடாது.காந்தி எந்த பதிவியிலும் இல்லாமல் மக்கள் மீது பற்று இருந்ததால் பெயர் வாங்கினார். ஈவேராவும் எந்த பதவியும் இல்லாமல் பெயர் வாங்கினார். யார் ஆட்சிக்கு வர விரும்புகிறேன் என்று சொன்னாலும் அவர்கள் கொள்ளையடிக்க தான் வருவார்கள் என்ற்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. (உபயம் திராவிட மாடல்) அவர்கள் உண்மையிலேயே நல்லவர்களாக இருந்தால் கூட...உயிரை துச்சம் என மதித்து , லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக பிடித்து குற்ற கூண்டில் ஏற்ற முடியுமானால் செய்யுங்கள். அப்படியானால் தமிழ்நாடு உங்களை உங்களை உண்மையான முதல்வனாக பார்க்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X